Ajithan > Quotes > Quote > Shanmugam liked it
“இன்னும் எவ்வளவு தூரம்? நான் எண்ணுவதை விட்டுவிட்டேன். மாறாத அந்த தாளம் மட்டுமே நெஞ்சில் அதிர்ந்தது. ஏற்றமும் இறக்கமும், இரவும் பகலும். தூரம் அல்ல அது, காலம். மனிதர்களாக நாம் கடப்பதெல்லாம் அது ஒன்றே. ஓடியும் நீந்தியும் சந்ததிகளை பெற்று பெருகியும் அசையாமல் தியானத்தில் அமர்ந்தும். என் முன்னே காலமே வெளியாகி விரிந்திருந்தது. எங்கு திரும்பினாலும் திசை ஒன்றே, பின்னால் ஒருபோதும் திரும்பமுடியாத கடந்த காலம். இறந்த காலம், பூத காலம். நிரந்தரமாக அது முன்னால் செலுத்தியது. என் முன்னால் தொலைவில் தெரிந்தது அன்றைய பிற்பகல், மேலும் நெடுந்தொலைவில், சூரியனின் காலடியில் கிடந்தது அந்தி. இனி வரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களுமெல்லாம் அதன் பின்னே. எங்கோ என் மரணம். எண்திசையிலிருந்தும் அருகி வரும் ஒரு வட்டம். ஒருவேளை அசையாமல் நான் இங்கு நின்றுவிட்டால் காலமும் உறைந்து நின்றுவிடுமா?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
No comments have been added yet.