Sujatha > Quotes > Quote > Madhu liked it

Sujatha
“ஆறு மாதம்: முகங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல். ஒரு வயசு: முதல் வார்த்தைகள், பொருட்களைக் கையாளும் திறமை. இரண்டரை வயசில்: பேசுவதைவிட அதிகமான வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். தான் என்பது வந்து, தான் ஆணா... பெண்ணா என்பது தெரியும். மூன்று வயசு: தனக்கு எத்தனை வயசு என்பது தெரியும். ‘பெரிய - சிறிய’ புரியும். நான்கு வயசு: பல வார்த்தை வாக்கியங்கள், நேற்று - இன்று - நாளை, புரியும். நாலிலிருந்து ஏழு: புத்திசாலித்தனத்தின் ஆரம்ப அறிகுறிகள். ஆறு வயசு: முதல் எழுத்துகள், முப்பது வரை எண்ணிக்கை நெட்டுருப் போடும் திறமை. "மாமாவுக்குத் திருக்குறள் சொல்லிக் காட்டு..." "மாத்தேன் போ..." பத்து வயசு: மனக்கணக்குத் திறமை. பதினோரு வயசில்: பகுத்தறியும் திறமை. பன்னிரண்டில்: - ‘பிளேட்டோவா! படிச்சிருக்கேனே. அதுல என்னன்னா சில இடங்களில் லாஜிக்கலாவே இல்லை!”
சுஜாதா, Thalaimai Cheyalagam

No comments have been added yet.