Jeyamohan > Quotes > Quote > Pavin liked it

Jeyamohan
“இந்திய சாதியமைப்பைப் பற்றிய மனநிலைகளை இன்னும் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டிய காலம் வந்துவிட்டது என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதை பிராமணர் உருவாக்கிய சதிவேலை என்று நம்பும் வெறுப்புவாத மூடநம்பிக்கையை படித்தவர்களாவது கைவிட வேண்டும். அது இந்தியப்பழங்குடி வாழ்க்கையில் இருந்து பலநூற்றாண்டுகளாக உருவாகி வந்த ஒரு பேரமைப்பு. முரண்பாடுகள் பரஸ்பர ஆதிக்கம் ஆகியவை ஒருபக்கம். அது எந்த சமூகப்பிரிவினையும் தவிர்க்க முடியாமல் உருவாக்கும் விளைவுதான். ஆனால் மறுபக்கம் கலைகளையும் தொழில்களையும் சார்ந்த உள்ளார்ந்த ஞானத்தையும் அனுபவ அறிவையும் பாரம்பரியமாகக் கொண்டுசெல்லுதல்; போரிடும் தன்மை, வணிகபுத்தி போன்ற பிறவிப்பண்புகளை முன்னெடுத்துச் செல்லுதல், ஒருங்கிணைந்து பெரும் அமைப்புகளில் உருவாக்குவதற்கானவை இயல்பான பொது அடையாளமாக அமைதல் என ஜாதிக்கு பல சாதக அம்சங்களும் உண்டு.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]

No comments have been added yet.