Sundara Ramaswamy > Quotes > Quote > Rameshbabu liked it

Sundara Ramaswamy
“இன்றைய இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவனுக்கு இன்றைய கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. 'அமெரிக்க இலக்கியத்தின் புதிய போக்குகள்' பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சி கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்ற இந்தி எழுத்தாளன் 'தமிழில் புதக்கவிதை உண்டா?' என்று கேட்கிறான். காஃப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம். எப்படி இருக்கிறது கதை?
ஒவ்வொரு மொழி இலக்கியத்தையும், அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும், அடுத்த மொழிகளில் அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தனித்தனிப் பத்திரிகைகள் இந்திய மொழிகள் அனைத்திலும் துவக்கப்பட வேண்டும் என இரண்டு பத்தாண்டுகளாக நான் நண்பர்களிடம் சொல்லிவருகிறேன்.”
Sundara Ramasamy, ஜே.ஜே: சில குறிப்புகள் [J.J: Sila Kurippugal]

No comments have been added yet.