Ivan Turgenev > Quotes > Quote > Chidambaram liked it

Ivan Turgenev
“நடால்யாவின் கண்களில் நீர் நிரம்பியது. எல்லா நேரங்களிலும் கண்ணீர் மனதுக்கு ஆறுதலைத் தந்துவிடுவதில்லை. ரொம்ப நேரத்திற்கு பாரம் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தது; கொஞ்சமாய், கடைசியில் அருவியாகப் பொங்கி வழிந்தது. முதலில் வெளிவரச் சிரமப்பட்டு, பின்னர் கொஞ்சம் கண்ணீர் மனதுக்கு இதத்தையும் ஆறுதலையும் அளிக்கும்-அப்படிக் கண்ணீர் வந்தால் வேதனை தீருகிறது. ஆனால் கண்ணீரில் பற்றற்ற கண்ணீரும் இருக்கிறது. அந்தக் கண்ணீர் மனமின்றி வெளியே வரும் கண்ணீர்; அசையாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் துக்கத்தின் பாரம் தாங்காமையால், இதயத்தால் பிழியப்பட்டு சொட்டுச் சொட்டாக வெளியேறும் கண்ணீர் அது. அந்தக் கண்ணீர் மனத்துக்கு இதத்தையும் தருவதில்லை; ஆறுதலையும் அளிப்பதில்லை. தவிர்க்கமுடியாத அழுகைதான் அப்படிப்பட்ட கண்ணீரைக் கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட கண்ணீரைச் சிந்தாதவன் இதுவரை உண்மையிலேயே துக்கமாக இருந்திருக்கிறான் என்று சொல்ல முடியாது. அவற்றை அன்றுதான் நடால்யா சுவைத்தாள்.”
Ivan Turgenev, Rudin

No comments have been added yet.