Tamil Book Readers - தமிழ் நூல் வாசகர்கள் discussion

பாடுக பாட்டே
6 views
பாடுக பாட்டே

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

Kadhai Solgiren (kadhaisolgiren) | 26 comments ஆசிரியர்:-நாஞ்சில் நாடன்
பதிப்பகம்:-விஜயா

தமிழ்பாட்டி ஔவையின் பாடல்வரியான பாடுக பாட்டே என்பது புத்தகத்தின் தலைப்பு. அவருடனான நெல்லிக்கனியை (உள்ளங்கை) உதாரணமாக்கி சொன்னால் இந்த புத்தகம் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சில பாடல்களின் தொகுப்பு என்பதை தலைப்பு உணர்த்தும். பள்ளியில் படித்தபோது “தண்டலை மயில்களாட” வும், நாராய் நாராய் செங்கால் நாராய் என்றபாடலும் சமீப காலமாக( 2வருடங்கள்) மனதுக்குள் ஓடி ..ஓடிக் கொண்டிருந்தது. கடைசி வரி நினைவிலில்லை.

இந்த புத்தகத்தில் நிறைய என்னைப் புதுப்பிக்கும்படியான பாடல்களுடன் மனதுக்குள் ஓடிய பாடலும் கிடைத்து சந்தோஷப்பட வைத்தன. ஒளவையார் ஒருவரல்ல பல்வேறு காலங்களில் பல்வேறு ஓளவையார்கள் இருந்திருக்கிறார்கள் என 1897ம் ஆண்டு ஔவையார் சரித்திரம் எழுதிய ஐயம்பதி தா. வேதாசல முதலியார் குறிப்பிடுவதாக இந்தநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்.


Full Review : https://wp.me/pcbJpq-BY


back to top

50x66

Tamil Book Readers - தமிழ் நூல் வாசகர்கள்

unread topics | mark unread