(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Nitya Chaitanya Yati

“அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இருந்தார். காந்திக்கு அடுத்து அவர்தான் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஆன்மீகத் தலைவர் என அறியப்பட்டவர். எங்கள் கல்லூரிக்கு வந்த அவர், பேராசிரியர்கள் தங்களுடைய ஆடம்பரமான இருப்பிடங்களை விட்டு நீங்கி கீழ்நிலையில் வாழும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்குச் சென்று சேவை செய்யவேண்டும் என்று தூண்டும் விதமாகப் பேசினார்.

கல்லூரி விடுதியை விட்டு நீங்குவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். அடையாறுக்கு அருகில் சென்னையில் மிக மோசமான சேரிகளில் ஒன்றில் இரண்டு ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசையை அமர்த்திக்கொண்டேன். அது ஒரு தாழ்வான, சகதி நிரம்பிய, மலேரியாவை உண்டுபண்ணும் கொசுக்கள் மொய்த்துக்கொண்டிருந்த இடம். நிறையக் குடிசைகள் நெருக்கமாக இருந்தன. சேரியின் நடுவில் என்னுடைய குடிசை இருந்தது. அந்தச் சூழலுக்கு ஈடுகொடுத்து வாழ்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் யாராவது ஒருவர் காலராவால் இறந்துகொண்டிருந்தார்கள். டாக்டர் ஒருவரை அழைத்துவர நான் முயன்றேன். ஆனால் பறையர்களின் சேரிக்கு எந்த டாக்டரும் வரத் தயாராக இல்லை. இறந்துகொண்டிருந்தவர்களின் அருகில் இப்படியாக கையாலாகாதவனாக நிற்க வேண்டியிருந்தது.

நல்ல குடிநீரை அவர்களுக்கு வழங்கினாலொழிய காலராவை முற்றிலுமாக நிறுத்தமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதைச் செய்ய நகராட்சியின் குடிநீர்க்குழாய் கோயில் நிலத்தின் குறுக்காக வரவேண்டியிருந்தது. பறைச்சேரி மக்களின் உபயோகத்திற்காக குடிநீர்க் குழாய் தங்கள் நிலத்தின் வழியாகப் போவதை அனுமதிக்க கோயில் நிர்வாகிகள் மறுத்துவிட்டார்கள்.

புனிதராக மதிக்கப்பட்ட முதலமைச்சர் ராஜாஜியிடம் போனேன். அவருடைய உணர்வுகளை மதிக்கத்தான் கல்லூரி விடுதியை விட்டு நீங்கி சேவை செய்வதற்காக நான் சேரிக்குப் போனதாக அவரிடம் சொன்னேன். ஒரு பிரஜை என்ற முறையிலும் முதல் அமைச்சர் என்ற முறையிலும் ஏழை மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவது அவருடைய பொறுப்பு என்பதைத்தான் நான் வேறுவிதமாக அப்படி வலியுறுத்திச் சொன்னேன். என்னை முகத்துக்கு நேராகப் பார்த்துவிட்டு மழுப்பாமல் நேரிடையாகச் சொன்னார், “மேடையில் ஒரு அரசியல்வாதி ஆவேசமாகப் பேசுவதை ஒரு முட்டாள்தான் நம்புவான். இன்றைக்கே சேரியைவிட்டு விடுதிக்குத் திரும்பிப் போய்விடு. இல்லையென்றால் காலராவுக்கு அடுத்த இரையாக நீதான் இருப்பாய்.” ராஜாஜியின் ஆளுமையில் ஒரு புனிதரும் ஒரு அரசியல்வாதியும் ஒன்றிணைந்து இருக்கமுடியும் என்று நான் நம்பியது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்துகொண்டேன்.”

Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
Read more quotes from Nitya Chaitanya Yati


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag