(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Jeyamohan

“துரியோதனன் பெருமூச்சுவிட்டான். “எப்போதும் தெய்வங்கள் அவனுடன் நிலைகொள்கின்றன. ஆசிரியரே, அவன் வெறுங்கைகளுடன் என்முன் மல்லாந்து கிடந்தான்…” என்றான். கிருதவர்மன் சீற்றத்துடன் “அவனை நீங்கள் கொன்றிருக்கவேண்டும்… அவன் தலையை உடைத்திருக்கவேண்டும். இந்தப் போரே பிறிதொரு திசைக்கு சென்றிருக்கும்” என்று கூவினான். “அதைச் செய்ய என்னால் இயலாது” என்றான் துரியோதனன். “அரசே, அவன் நம் இளைய அரசர்கள் அனைவரையும் கொன்றவன். நம் அரசமைந்தரை கொன்று குவித்தவன். நம் பிதாமகரின் தலையறைந்து உடைத்தவன்” என்று கிருதவர்மன் கூவினான். “ஆம், ஆனால் அவன் அரசன் அல்ல, நான் எந்நிலையிலும் அரசனே” என்றான் துரியோதனன். “அரசன் என மறுபக்கம் எனக்கு இணையானவன் யுதிஷ்டிரன் மட்டுமே. அவன் அதை செய்திருப்பானா என்று மட்டுமே நான் எண்ணுவேன்.” கிருதவர்மன் தளர்ந்தான். தலையை அசைத்தபடி “ஊழ்” என்றான்.”

Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
Read more quotes from Jeyamohan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag