(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Jeyamohan

“நீங்கள் களம்பட்டீர்கள் என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் கிருதவர்மன்.

“இல்லை, அவன் அறிவான்” என்று துரியோதனன் சொன்னான். “நான் அவனை களத்தில் சந்தித்தேன். அவனை கொன்றாகவேண்டும் என்றே போரிட்டேன். உயிரின் விசையாலும் அதையும் விஞ்சும் வஞ்சத்தின் விசையாலும் அவன் எனக்கு நிகராகவும் அவ்வப்போது என்னைக் கடந்து எழுந்தும் போரிட்டான். என் தாக்குதலில் இருந்து தப்ப அவன் கள எல்லையைக் கடந்து காட்டுக்குள் புகுந்தான். அவன் குரங்கின் முலையுண்டவன், காட்டுமரக் கிளைகளின்மேல் தாவும் கலை அறிந்தவன். அது தெரிந்திருந்தும் அவனை கொன்றேயாகவேண்டும் என்பதனால் நான் அவனை துரத்திச் சென்றேன். என்னால் அவன் ஏறிய மரங்கள்மேல் ஏற இயலவில்லை. ஆகவே அந்த மரங்களை என் கதையால் அறைந்து உடைத்தேன். கதையை வீசி எறிந்து அவனை நிலத்தில் வீழ்த்தி தாக்கினேன். வென்றிருப்பேன், ஆனால் அவன் கதை உடைந்து தெறித்தது. படைக்கலமில்லாமல் அவன் என் முன் கிடந்தான். என்னால் அவனை கொல்ல இயலவில்லை.”

Jeyamohan, வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
Read more quotes from Jeyamohan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag