More on this book
Kindle Notes & Highlights
Read between
January 4 - January 5, 2024
தோட்டியும் மனிதனாக வாழமுடியாதா? அவனிடமும்
காதல் இதயங்கள் கூடிக் கலக்கும்போது ஏற்படும் ஆவேச உணர்ச்சி இங்கும் இருக்கிறது. நெஞ்சு படபடக்கிறது; தொண்டை இடறுகிறது. சொல்ல எண்ணும் வார்த்தை வெளியே வராமல் தத்தளிக்கிறது.
சுவைக்கும் சக்தி தோட்டியின் நாவிற்கும் உண்டு. தோட்டியின் நாசிக்கும் நறுமணங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. தோட்டியின் சருமத்திற்கும் ஸ்பரிச உணர்வு இருக்கிறது. நல்ல இன்பமான நாதங்களை அவனும் கேட்டு அனுபவிக்கிறான்.
இப்படி எத்தனையோ பேரை அந்தக் குடிசைகள் பார்த்திருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று வருஷங்கள்; அவ்வளவுதான் - ஏதாவது தொத்துநோய் அவர்களை வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும். இதுதான் அந்த வர்க்கத்தின் சரித்திரம்.
இரா ஏழுமலை and 1 other person liked this
ஆலப்புழைப் பட்டணத்தில் அதை ஒட்டி ஏற்பட்ட சாவுக்குக் கணக்கு வழக்குக் கிடையாது. ஏனெனில் சாகும் ஆசாமிகள், மனித சமுதாயத்தின் ஜனத்தொகையில் உட்பட்டவர்களல்ல. சாவது பிச்சைக்காரனும் அகதியும்தான். வீதியோரங்களிலிருந்தும், சந்துகளிலிருந்தும் லாரியில் தூக்கிப்போட்டுக்கொண்டு போவதைப் பார்க்கலாம். எப்படிக் கணக்கெடுப்பது! சாத்தியமே இல்லை. அது மட்டுமா, இப்படிச் செத்துத் தொலைகிறவர்கள் யாருக்காவது ஊர் பேர் உண்டா?
என்ற பயம் மோகனுக்கு இல்லை. தோட்டிகளைச் சிருஷ்டிப்பது தோட்டிகளல்ல என்பது அவனுக்குத் தெரியும். தோட்டிகள் அவர்கள் போக்கில் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள். தன் குழந்தை தோட்டியாகக் கூடாது என்று ஒரு தகப்பன் எண்ணினாலும், அவன் குழந்தை தோட்டியாகிவிடலாம்.
Premanand Velu liked this