More on this book
Community
Kindle Notes & Highlights
உங்களுக்குக் கவிதையை விட உரை நடையும்,, உரை நடையை விடக் கவிதையும் நன்றாக வரும் என்று எங்களுக்குத் தெரியும்.
வாழ்வைச் சொல்லித் தீர்க்கவே வாழ்க்கை போதாது. சொல்லிச் செல்லுங்கள்.
‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ! ’
ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு தோற்றம் காட்டும் கண்ணாடிதானோ வாழ்க்கை!
‘அம்மா என்றால் ஓர் அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, என தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா!’
உனக்கு நான் அறிமுகமாகும் முன்பே, எனக்கு நீ அறிமுகமாகிவிட்டாய்.
உன்னுள் கருவாகி, உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான். மண்ணுள் நான் வீழ்ந்து, மெள்ள உதிரும் வரை என்னுள்... நீ வாழ்வாய்!
உண்டு.அழுதுகொண்டு இருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்துவிடுவது இல்லை... அழுதுகொண்டு இருக்கும் அப்பாவின் முகம்.
‘என் அப்பா ஒரு மூட்டை புத்தகம் கிடைப்பதாக இருந்தால் என்னையும் விற்றுவிடுவார்!’
எங்கோ இருக்கும் இதை எழுதிய எழுத்தாளனுக்கு நான் இங்கு இருந்தே கை குலுக்குகிறேன்.’
‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’
கடன்பட்ட உங்கள் உள்ளம் கலங்கியதே இல்லை.
நான் படித்த புத்தகங்களிலேயே... உங்கள் அனுபவங்கள்தான் சிறந்த புத்தகம்!
நீங்கள் இறக்கும் வரை என்னை உங்கள் சைக்கிளின் பின் இருக்கையில் அமரவைத்து மிதித்துச் சென்றீர்கள். ஒரு முறைகூட நான் உங்களைச் சுமந்தது இல்லை.
இப்போதும் அப்படித்தான் நீங்கள் பிடித்துக்கொண்டு இருப்பதாக நினைத்து ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
‘பழைய குளம் தவளை குதிக்கிறது க்ளக் க்ளக்...’
மலை மாதிரி அமைதியான அழகு.
தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்!’’
எல்லோரையும் இணைக்கும் ஒரே புள்ளி... காதலுக்கு அடுத்து, மரணமாகத்தானே இருக்க முடியும்?
நெல் வயலில் ரோஜாகூட களைதான்
அதிகப்படியான அன்பும் சுமைதான்
பூமியே ஒரு வாடகை வீடுதான் என்பது கவிஞனின் பெருமிதம்.
அத்தைகளால் வளர்க்கப்படும் குழந்தைகள், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
வெயிலுக்கும் சோர்வு இருக்கும்தானே?
‘நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’
ஒரு கிளிக்கும் இன்னொரு கிளிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது கிளிகளும் மரங்களும் மட்டுமே அறிந்த ரகசியம்.
ஏன் எல்லோரையும் வயதென்னும் தூண்டில் முன்னே இழுத்தபடி நகர்ந்து செல்கிறது
‘எத்தனை முறை நனைந்தாலும் மழையில் நனைவது சுகம்.
‘வேர் என்பது கண்ணுக்குத் தெரியாத மரத்தின் பூ. பூ என்பது கண்ணுக்குத் தெரியும் மரத்தின் வேர்!’
ஓடி ஓடிக் காற்றில் உடைவதற்கா, இந்த ஓட்டம்?
உண்மையில் பூக்கள் ஒருநாள் மண்ணில் உதிர்வது எல்லாம், வேர்களை முத்தமிடத்தானோ?
‘பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளையும், ஆண்டு இறுதியில் கடைசி நாளையும் அருகிருந்து பார்க்கும் தகப்பன்கள் பாக்கியவான்கள்.
‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’
மலையும் அதே மலைதான் வழியும் அதே வழிதான் மாறியிருப்பது மனசு மட்டுமே!’
உடைந்த வளையல் துண்டு குளத்தில் எறிந்தேன் எத்தனை முழுவளையல்கள்!’
அஞ்சாப்பு படிக்கையில அப்பா - அம்மா விளையாட்டு விளையாடுவோம். அந்தப் புள்ள சொப்பு வெச்சி சமைக்கும். நான் ஆபீஸ் போய்ட்டு வருவேன். மண்ணும் கல்லுமா சோத்தைப் பிணைஞ்சி ஊட்டிவிடும் பாருங்க... அதுக்கப்புறம் அந்த மாதிரி ருசியான சாப்பாட்டை இன்ன வரைக்கும் நான் சாப்பிட்டதே இல்ல.’’
கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பாக்களுடன் வளர்ந்த குழந்தைகள் வளர்ந்த பிறகும் அம்மாவை அண்ணி என்று அழைக்கும்!
சித்தப்பாக்களின் தோள்களில் அமரும் பிள்ளைகள் இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் உயரத்துடன் பார்க்கிறார்கள்.
வேலை இல்லாதவனின் பகலும், நோயாளிகளின் இரவும் நீளமானவை என்பதைப்போல...
‘நதியாலே வளரும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் பிரியங்களை நதி அறியுமா? அது உணருமா? கரையோரக் கனவுகள் எல்லாம்...’
அச்சங்கள் ஆச்சர்யமாகவும், ஆச்சர்யங்கள் அனுபவங்களாகவும் மாற வேண்டும் என்றும் மனசு நினைத்துக்கொள்கிறது!
கல்கி யின் பொன்னியின் செல்வனையும்; சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளையும்;
‘ஒரு சிலர் மட்டுமே மழையை உள்ளத்தில் இருந்து உணர்கிறார்கள்; மற்றவர்கள் நனைய மட்டுமே செய்கிறார்கள்!’ - பாப் மார்லே
‘‘அது கயிறா இருந்தாலும் பாம்பா இருந்தாலும் புடிச்சித்தான் ஆகணும். ஏன்னா, அது நாம வளர்ந்த தொப்புள்கொடியோட மிச்சம்.’’
என் தலைக்கு மேல் மழை பெய்யும் மேகங்கள் கடந்து சென்றபோது எல்லாம், நான் குடை பிடித்தபடி கவிதை எழுதிக்கொண்டு இருந்தேன்.
காதல் கவிதை எழுதுகிறவர்கள் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்
அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்!’’
‘என் ரூபவதி! உன் கண்கள் புறாக் கண்கள்!’
முத்தம் கொடு’ என்று நான் கேட்க; ‘முடியாது’ என்று நீ வெட்கப்பட; ‘அச்சம் தவிர்’ என்று நான் சொல்ல; ‘ஆண்மை தவறேல்’ என்று சிரித்தபடி நீ பதில் சொல்ல; அய்யோ! என் கண்ணம்மாஎன்னை விடச் சிறந்த கவிஞர் நீதானடி.