நல்ல கவிதை எது?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நல்ல கவி என்பது எங்கும் எப்போதும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்க முடியாது. நல்ல கவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நல்ல கவிதைகளையும் நல்ல கவிஞர்களையும் தேடுவதாலேயே பலரும் தேடியது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம், புதிரோடு காலம் ஓட்டுகின்றனர்.


நாம் எல்லோரும் இன்னொருவரோடு கதைக்கின்ற நிலையில், பயன்படுத்தும் மொழியின் அளவும் தன்மையும் பாங்கும் தனித்துவமானது. மிகவும் வித்தியாசமானது. இந்தப் பன்மைத்துவம்தான் ஒவ்வொருவரும் தனித்துவமானவர் என்ற உண்மையைச் சொல்லி நிற்கிறது.


நீ ஒருவரைக் கூப்பிடுவதும் அவன் ஒருவரைக் கூப்பிடுவதும் வினையில் ஒன்றானாலும், மொழியின் சொற்களில் தனித்துவமானது.


poem


நான் கவிதைகளை வாசிக்கின்ற போது, அது நல்ல கவிதையாக இருக்க வேண்டுமென்றே விரும்புவேன். சொற்களால் வசீகரிக்கும் கவிதைகளை எனக்குப் பிடிக்கும். ஆனால், இந்த வசீகரம் என்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். ஆக, நான் காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை உன்னால் காண முடியாமல் இருக்கலாம். நீ காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை என்னாலும் காண முடியாமல் இருக்கலாம்.


நீ விரும்புவது ஒன்று. அவன் விரும்புவது வேறொன்று. வித்தியாசமானவற்றை தான், நாம் விரும்பிக் கொண்டிருக்கிறோம்.


சில கவிதைகள் தேநீர் போன்றது, சிலதோ நெட்டையானது, சிலதோ பால் போன்றது, சிலதோ காற்றோட்டம் நிறைந்தது, இன்னும் சிலதோ ஆவல் செறிந்தது, சிலது துணிச்சலானது, சிலதோ கொழுப்புக்கூடியது, இன்னும் சிலதோ அநாதரவானது, இன்னும் சிலது திருடுவது, சிலதோ அங்கீகாரம் கேட்பது என கவிதைகள் கொள்ளும் பாத்திரங்கள் ஏராளம்.


ஆனால், நான் கவிதைகளை வாசிக்கும் போது, அவை எங்கிருந்து வந்தன என்று ஆராய்வதே கிடையாது. ஆனால், அவை எங்கே செல்லப் போகின்றன என்பதை ஆர்வமாய் அறிய ஆவல் கொண்டிருப்பேன்.


எனக்கு அந்தக் கவிதைகள் தன்னகம் கொண்டுள்ள அழகிய நினைவுகள் என்ன, அவற்றின் பிரியமான உணவுகள் என்ன, செய்கின்ற உடற்பயிற்சிகள் என்ன, வாசிகசாலையில் அதற்கு அங்கத்துவம் இருக்கிறதா?, சந்தையில் கடைசியாக வாங்கிய காய்கறி என்ன என பலவற்றையும் அறிய ஆவல்.


நல்ல கவிதைகள் உங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு, நாளின் இடம்பெற்ற அழகிய நினைவுகளை உங்கள் காதுகளுக்குள் இனிமையாய்ச் சொல்லப் பயப்படாது.


நல்ல கவிதை வீரமிக்கதாக இருக்கலாம். கோழையாகக் கூட இருக்கலாம். உங்களிடம், அதனை அறிமுகம் செய்து கொள்ள அது கூச்சமிக்கதாகக் கூட இருக்கலாம். ஆனாலும், நல்ல கவிதை, நீங்கள் ஆர்வமாய் அதனருகில் சென்று அதனோடு கதைக்கும் வாய்ப்பை உண்டுபண்ணும் வசீகரத்தை இயல்பிலேயே கொண்டது.


“நீயெழுதுவது ஒரு நல்ல கவிதையாயிருக்கலாம். நீகூட ஒரு நல்ல கவிதையாய் இருக்கலாம். உன் தெரிவு” — கோபாலு சொல்லச் சொன்னான்.


- உதய தாரகை


இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே – Follow @enathu


அழகிய தமிழ் இணைய எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்ட நிலை niram.org/tamil-webfont/ #TamilWebFont via @enathu
Tharique Azeez (@enathu) December 28, 2013


Filed under: அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, கவிதை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2014 23:19
No comments have been added yet.