மாலையின் பொன்னொளியில் பளிங்கு அரங்கின் ஓரத்தில் கண்ணாடி மதிலுக்கு வெளியேகரை தழுவிக் கடக்கும் கடலலைகள் மேசையில் இரு பீங்கான் கோப்பைகள்மெல்ல எழுகிற வாசனை அகத்தின் துளி மோகம் போல்அவன் விரல் நுனி ஸ்பரிசம் போல்காஃபி கோப்பையின் கதகதப்புமழுங்கும் ஒளிக்கிடையேபைசாந்திய முணுமுணுப்புகள் அசையாத விழிகளின் அறிந்திற்ற மொழியுணர்ந்துநாண்களை மீட்டும் பாணன்மிடற்றில் எழுந்த கசப்பாய்வனதேவதையின் முத்தம் மதுரப்பரல்கள் சேர்த்திடமறைந்தனள் தேவதை கையெழுத்தாய் கழுத்தில் அவளது நகக்குறி அவள் வருகையின் தடமென அரங்கெங்கும் கிடந்தன லைலக் மலர்கள்...
Published on February 21, 2026 08:23