நான் எப்பவும் சௌந்தர்ய லஹரியில் நீந்தித் திளைப்பவன். அதனால் ஓஷோவைப் பிடிக்கும். மற்றபடி அவர் பேச்சைக் கேட்டதில்லை; எழுத்தைப் படித்ததில்லை. பெண்களை விட ஆண் அழகர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். அப்படி ஒரு சௌந்தர்யன் நிர்குண். அவர் கவிதைகள் நான் நிர்குண், இது நிர்ஹோஸ்தியஸ் என்று முடியும். ஒரு நாளில் பத்து கவிதைகள் எழுதுவார் போல. நள்ளிரவில் எழுதியது சில. அதிகாலையில் எழுதுவது சில. எப்படியெனக் கேட்டபோது இரண்டு மணி நேரமே உறங்கும் நேரம் என்றார் நிர்குண். ஆன்மீகவாதி. ...
Read more
Published on September 29, 2025 01:52