ஏகன் அநேகன் என்ற உயரிய, விழுமியம் மிக்க கோட்பாட்டின் தளபதி நீங்கள்

பஹல்காம்
நீ இந்துவா இஸ்லாமியனா என்று கேட்டு 
இந்து என்று உறுதிப்பட்டால்தான் சுட்டார்கள் என்று சங்கிகள் சொல்வதை உண்மை என்றே கொள்வோம்
வாய்ப்பை மறுக்கவில்லை
எதற்காக அவர்கள் அப்படிக் கேட்டார்கள் என்று ஒரு நிமிடம் யோசிப்போம்
பாரபட்சமின்றி இந்தியர்களைக் கொன்றால் 
தங்களை எதிர்ப்பதில் இந்தியர்கள் ஒன்றுபடுவார்கள்
இப்படிப் பிரித்துக் கேட்டுக் கொன்றால் இந்தியா மத ரீதியாக நம்மை எதிர்ப்பதில் பிளவுபடும்
அப்படியாகப் பிளவுபட வேண்டும் 
என்று அவன் கருதுகிறான்
மதுரை ஆதீனம் சென்னை SRM வளாகத்தில் பாரி வேந்தர் ஏற்பாடு செய்திருந்த சைவ மாநாட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்.
வழியில் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு சன்னமான விபத்தை சந்திக்கிறார்
இரண்டு கார்களிலும் வந்தவர்கள் சண்டைபோடுகிறார்கள். சமரசம் ஆகிறார்கள். சென்றுவிடுகிறார்கள்.
அவ்வளவுதான்
மாநாட்டில் உரையாற்றும்போது பாகிஸ்தான் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறுகிறார்
வெளியே வந்ததும் யார் அவர்கள் என்று நிரூபர்கள் கேட்கிறார்கள்
தொப்பி, தாடி
தொப்பி தாடி என்கிறார்
அது கொலை முயற்சி என்பது பச்சைப் பொய்
அவரது உடல்மொழி அசிங்கம்
இவர் ஏன் இப்படி சொல்கிறார்
இந்து முஸ்லீம் பிளவுபட வேண்டும் என்று விரும்புகிறார்
அவனும் அதைத்தானே செய்கிறான்
ஒன்று சொல்லவேண்டும் சன்னிதானம், அவர்களே,
ஏகன் அநேகன் என்ற உயரிய, விழுமியம் மிக்க கோட்பாட்டின் தளபதி நீங்கள் 
அவன் தீவிரவாதி
அறமற்றவன்
நீங்களுமா?
07.05.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2025 02:16
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.