பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம்

 

15.03.2025 அன்று பெரம்பலூரில், “இடது விழிவழி வைக்கம் 100” என்ற தலைப்பில் தீக்கதிர் வாசக வட்டத்தில் உரையாற்றியது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்ததுவெளியே வந்ததும் மருத்துவர் கருணாகரன் இடுப்பை அணைத்து இறுக்கி கன்னத்தைத் தட்டிவிட்டு சென்றார்பிள்ளை அம்பேத் கோகுல் அதேபோல் குனிந்து இடுப்பை அணைத்து சிரித்துவிட்டு சென்றான். அவன் உயரத்திற்கு குனிந்தால்தான் நம்ம இடுப்பு கிடைக்கும்.அடுத்தநாள் காலை அழைத்த கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணசாமி உரைகுறித்து அரைமணி நேரம் பேசினார்இத்தனை ஆண்டுகளில் அவர் என்னை அழைத்துப் பேசுவது இது இரண்டாவது முறைஇவை எல்லாம் இப்படி இருக்க,எங்கள் கூட்டங்களில் ஆர்வமாக பங்கேற்கும் எங்கள் மாவட்டச் செயலாளர் தோழர் Ramesh Perumaldyfiயின் இளைய மகள் (அவரது இரண்டு மகள்களின் பெயர்களில் குழம்பிக் கிடப்பதால் தவறாக சொல்லி பிள்ளைகளிடம் திட்டு வாங்க விருப்பம் இல்லை) வெளியே வந்து கேட்டாள்”பேச்செல்லாம் செமையா புரிஞ்சுது. ஆனா ஒன்னே ஒன்னுதான் புரியவே இல்ல. ஆமா வைக்கம் வைக்கம்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?”அவள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருக்கிறாள்வைக்கம் என்றால் கேரளாவில் உள்ள ஊர் என்றதும்”இப்ப புரியுது, கேரளாவில் வைக்கம் ஒரு ஊர். அந்த ஊர்ல இந்தப் பிரச்சினை. “ என்கிறாள்.குழந்தைகளும் வருவார்கள். அவர்களையும் மனதில் கொண்டு பேச வேண்டும் என்பது அன்றைய கூட்டத்தின் பாடம்இன்னொரு விஷயம் என்னவெனில் அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் அகஸ்டின் அவர்களின் குழந்தையின் தோழமைஅவளும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதியிருக்கிறாள்”அங்கிள் வீட்டுக்கு வாங்க, டீ போட்டுத் தாரேன்” என்றாள்பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம் தொடங்கி இருக்கிறது
17.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2025 21:56
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.