“நான் என்ன செய்கிறேன் என்றுஉனக்குத் தெரியுமா? ‘
“கருப்புப் பணத்தை
மீட்பதாகச் சொன்னீர்கள்
எல்லோர் கணக்கிலும் பதினைந்து லட்சம்
வரவு வைப்பதாய்ச் சொன்னீர்கள்
ஒவ்வொரு ஆண்டும்
இரண்டு கோடி பேருக்கு
வேலை தருவதாகச் சொன்னீர்கள்
பெட்ரோல் விலையை
குறைப்பதாகச் சொன்னீர்கள்
அமெரிக்க டாலருக்கு இணையாக
ருபாயின் மதிப்பை
உயர்த்துவதாகச் சொன்னீர்கள்
ஊழலை அடியோடு
ஒழிப்பதாகச் சொன்னீர்கள்
ஏழை மக்களுக்காக
ஆட்சி நடத்துவதாகச் சொன்னீர்கள்
கங்கை நதியை
சுத்தம் செய்வதாகச் சொன்னீர்கள்
ஜனநாயகத்தின் கோவிலென்று
பாராளுமன்றத்தைச் சொன்னீர்கள்!”
“போதும். நிறுத்து! நிறுத்து!!
செய்வதைக் கேட்டால்
சொன்னதையெல்லாம் சொல்கிறாய்!
துரோகியே!
இன்னுமா அதையெல்லாம்
நினைவில் வைத்திருக்கிறாய்”
Published on January 19, 2025 23:04