தமிழ்நாட்டில் ஒரு நோய் இருக்கிறது. எதிராளியை, தன் கருத்துக்கு, ரசனைக்கு ஒவ்வாவதவர்களைக் கோமாளி ஆக்குவது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இந்த நோய் பரவியிருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் எனச் சொல்கிறேன் என்றால், எல்லோரும் இதைச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு திமுக ஒருவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது எனில், பதிலுக்கு எதிர்த்தரப்பு ஸ்டாலின் வாய் தவறதுலாகப் பேசிய விடியோவை பரப்பு பரப்பு எனப் பரப்பி அவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது. திமுக, அதிமுக இரண்டும் விஜயகாந்தை கோமாளியாகச் சித்தரித்தது நினைவிருக்கலாம். ...
Read more
Published on January 19, 2025 19:54