வல்லிப்பெண் கர்ப்பம் தரித்தாள், தாங்க மாட்டாள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – சிறு பகுதி அதிலிருந்து

 

 

 

அவர் தோளில் கை வைத்துப் பிடிச்சு நான் கேட்டேன் –

 

நீங்க அமிர்தவல்லியை வச்சிண்டிருக்கேளா?

 

இல்லை.

 

அப்போ நாலு நாள் முன்னாடி கோவில்லே உற்சவக் கொடி ஏத்தின அப்புறம், ஊர் வெளியிலே இருந்து ரெட்டைக் காளை வண்டியிலே அவளோட போனது யாரு?

 

நான் தான்.

 

நான் அழுதபடியே அவர் முகத்தில் அறைந்தேன். அவர் ஒண்ணும் செய்யலே.

 

அவளை எங்கே கூட்டிப் போனேள்?

 

மதுரைக்கு.

 

சிருங்காரமா உல்லாசமா இருந்துட்டு வந்தேளா?

 

இல்லே, ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போனேன்

 

ஏன், பரமக்குடி வைத்தியர் சிஷுருஷை போறாதா? நீங்க வேறேயா?

 

ஆமா. நான் வேறே.

 

என்னெல்லாம் தந்தாப்பலே?

 

வைத்தியர் தராத மத்தொண்ணு

 

அவர் தீவிரமா முயற்சி செஞ்சிண்டிருக்கார் அமிர்தவல்லியை குணமாக்க. தெருவோட தெரியும். ஊரோட தெரியும். நான் சொன்னேன்.

 

அவர் முயற்சியிலே தான் அவ முழுகாம இருக்கா

 

நம்பணுமாக்கும் – நான் கேலியாச் சிரிச்சபடி கேட்டேன்.

 

என் புகையிலைக் கடைக்காரர் கறாரான தொனியோட கேட்டார் என்னை –

 

எதை நம்பலே? அவ முழுகாம இருக்கறதையா,  வைத்தியர் அவளுக்கு அந்தக் கதிகேடு வரும்படிக்கு பண்ணிணதையா?

 

ரெண்டையும் தான்.  அதை விட முக்கியம் இதிலே நீங்க புதுசா எங்கே வந்தது? இல்லே ரெண்டு பேரும் ரகசியமா ரமிச்சு இப்போ தான் வெளியிலே வர்றதா எல்லாம்?

 

நான் அவர் முதுகில் அடித்தேன். ஒண்ணுமே சொல்லலே அவர். ஒண்ணும்.

 

நீ நம்பாட்ட போ. என் மனசு சுத்தம். அவளுக்கு கர்ப்பம் கலைக்க டாக்டர் துரை மாட்டேன்னுட்டார்னு.

 

அவர் சொல்ல வந்ததை முடிக்க விடாமல் நான் கேட்டேன் –

 

கடையிலே படியேறி வெத்தலை வாங்க வந்த ஸ்திரி கடைக்காரர் கிட்டே தன்  கர்ப்பத்தைப் பத்தி பேசறது என்ன மாதிரி நெருக்கம்?

 

அவளுக்கு என் மேல் ஒரு நம்பிக்கை.

 

என்ன, ரகசியமா தப்பு பண்ணுவேள். எசகு பிசகாப் போனாலும் சரியாக்கி விட்டுடுவேள் அதுதானே?

 

வாய்க்கு வந்ததை பேசாதே. சொல்றதை முழுக்கக் கேளு.

 

கேட்கத்தானே இங்கே இருக்கேன். சொல்லுங்கோ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2024 21:55
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.