நித்தியகல்யாணியில் தேடித்தேடிப் பூ ஆயும் அதிகாலை. மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரக்கொப்பை, ஆட்டுக்குக் குழை குத்தும் கம்பியால் எட்டிப்பிடித்து, கொளுவி வளைக்கும்போது, சொட்டுச் சொட்டாக கொஞ்சம் பனித்துளி, தலை, முகம், கழுத்தடி எல்லாம் விழுந்து உடம்பு சில்லிடும். திருவிழாவில் வாங்கிய சின்னப் பனை ஒலைப்பெட்டியில், மொட்டுத் தவிர்த்து, பூக்களைப் பிடுங்கிப் போட்டவாறு செவ்வரத்தைக்குத் தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகைப் பூக்கள்? அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஒடித்துப் போடுகிறேன். தோட்டத்தில் நின்ற ...
Published on June 11, 2024 14:36