“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ.
முந்திரி முத்தொளி சிந்திக்கோ,
மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே.
தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே.
தங்க கொலுசல்லே
குருகும் குயிலல்லே
மாறன மயிலல்லே”
‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடலிலிருக்கும் மலையாள வரிகள் அவை. தமிழாக்கும்போது அவ்வரிகள் இப்படி அமைகின்றன.
“அழகிய நிறங்கள் நிறைந்த சுந்தரியே.
தாங்கு தக்கென தகதிமி ஆடும் தங்க நிலாவே.
உன் தலைவனோடு நீ,
புன்னகை சிந்திக் கொஞ்சி விளையாடு.
உன் திராட்சை இரசமூட்டும் முத்துப்பற்களால்
சிரித்து அவனைச் சிதறவிடு.
நீ,
தங்கக் கொலுசல்லவா?
கூவும் குயிலல்லவா?
உன் ...
Published on February 27, 2024 16:15