ஆனால், நாட்டில் உள்ள வேறு எந்த மதத்தினரும் இதை எதிர்க்காத நிலையில் இசுலாமிய மதத் தலைவர்கள் மட்டும் இதை எதிர்த்துள்ளனர். பிற எல்லா மதத்தவரையும் போல இன்றுள்ள நவீன வாழ்க்கை வசதிகளை, அறிவியல் முன்னேற்றங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, 1200 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குரானை, இன்றைக்கும் அப்படியே வரி பிசகாமல் பின்பற்றிக் கொண்டு வாழ முடியுமா, வாழ முயல்வது நியாயமா என்பதை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும். ஆதிக்க மதமும் அடிமைப்பட்ட மதமும் மோதும் போது அடிமைப்பட்ட மதத்தின் பக்கம் நிற்பது நியாயமானதுதான். ஆனால் மத உரிமையும், மனித உரிமையும் மோதும்போது மனித உரிமையின் பக்கம் நிற்பதே நியாயமானது. இந்த நியாயத்தை இசுலாமியர்கள் உணரவேண்டும். கட்டாயத் திருமணப் பதிவு ஆணையை எதிர்ப்பின்றி ஏற்கவேண்டும்.
Published on May 20, 2010 10:09