தோழர் முத்துமாறன் ஒரு பேராசிரியர். ஆர்வத்தோடு இயங்கக்கூடியவர். எந்த நேரமும் புன்னகைத்தபடியே இருப்பவர்
27.01.2024 அன்று நடந்த புத்தகத் அறிமுகக் கூட்டத்தில் அவரும் உரையாற்றினார்
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் ”இவர் என் மாமனார்” என்று அவரை அறிமுகப் படுத்துகிறார்
வணங்கிவிட்டு, “மாப்ள பேச்சைக் கேட்க வந்தீங்களா சார்” என்று கிண்டலாக கேட்கிறேன்
“தான் எங்குப் பேசப் போனாலும் கேட்கத் தனது மாமனார் வந்துவிடுவார் என்ற செய்தியை அப்படி ஒரு மலர்ச்சியோடு முத்துமாறன் சொல்ல
அவர் பேசறது கேட்கப் பிடிக்கும் என்று சொல்லும்போது தோழர் முத்துமாறன் மாமனார் முகத்திலும் மலர்ச்சி
இது அபூர்வமாக வாய்ப்பது
இப்படியே மகிழ்ந்திருங்க
Published on January 29, 2024 06:36