வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்த நூல் சாட்சி

 
கீழவெண்மணிக்கு சென்று அந்தப் போராட்டக் களத்தின் எஞ்சிய சாட்சியாக இருக்கும் தோழர் கோ.பழனிவேல் அவர்களை ஆளுநர் சந்திக்க இருப்பதாக செய்திகள் கசிவதையும்

தோழர் பழனிவேல் ஆளுனரைச் சந்திக்க தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள செய்தியையும் 28.01.2024 அன்று காலை நான் வாசித்ததும்


”மரிச்ஜாப்பி” நூலை எழுதிய தோழர் ஹரிலால் நாத் அவர்களின் முன்னுரையையும்
அதன் தமிழ் பெயர்ப்பாளர் தோழர் ஞா.சதீஸ்வரன் அவர்களின் முன்னுரையும்




இன்று இரவு வாசித்ததும் மிகவும் தற்செயலாகத்தான்
இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதையும், 
இன்றைய தீக்கதிரில் வந்த செய்தியை மிக எச்சரிக்கையோடு இடதுசாரிகள் அணுக வேண்டும் என்று இந்த இரண்டு முன்னுரைகளும் நமக்கு தருவதையும் என்னால் உணர முடிகிறது
‘மரிச்ஜாப்பி’ தமிழில் வருவதற்கு திருவாரூரில் நடந்த ஒரு படிப்பு வட்டத்தில் நடந்த ஒரு உரையாடலில் ஒரு குழந்தைக் கேட்ட ஒரு கேள்விதான் காரணமென்பது சில கோரிக்கைகளை நம்மிடம் வைக்கிறது
திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு படிப்பு வட்டத்தை நமது பிள்ளைகள் நடத்தி வருகிறார்கள்
ஒரு நாள் “கீழவெண்மணி” குறித்து உரையாடல் நடக்கிறது
அப்போது ஒரு குழந்தை “மரிச்ஜாப்பி”யில் லட்சக்கணக்கான அகதிகளை அன்றைய இடதுசாரி அரசாங்கம் கொன்று அழித்ததாமே என்ற ஒரு கேள்வியை வைக்கிறார்
அதுவரை,
அங்கிருந்தவர்களில் பலருக்கு மரிச்ஜாப்பி என்றால் என்னவென்றே தெரியாது
ஆக அந்தக் கேள்விதான் தோழர் சத்தீஸ்வரனை இதுநோக்கி உந்துகிறது
அந்தக் கேள்விதான் இந்த நூல் தமிழில் வருவதற்கு காரணமாக அமைகிறது
மாநிலத்தில் மம்தா அரசங்கமும்,
ஒன்றியத்தில் பாஜக அரசாங்கமும் வந்த பிறகு
மேற்கு வங்கத்தில் மரிச்ஜாப்பியில் அகதிகளை கொன்று அழித்ததாக குவியல் குவியலாக புனைந்து எழுதப்பட்ட வதந்திகள்தான் தோழர் ஹரிலால் நாத் அவர்களை இந்த நூலை எழுதத் தூண்டியது
ஆக வதந்திகள் இந்த மூல நூலையும்
வதந்திகளைக் குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்வி நூலின் தமிழாக்கத்தையும் கொண்டு வந்திருக்கிறது
வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது?
என்பதற்கு இந்த நூல் சாட்சி
உரையாடல்களை, கேள்விகளை ஊக்கப்படுத்துவோம்
ரவி கீழவெண்மணிக்குப் போக நினைப்பது என்பதே நாம் எச்சரிக்கையோடு அதன் வரலாற்றினை இன்னும் பேரதிகமாக உரத்து பேச வேண்டும் என்பதையும்  நமக்கு உணர்த்துகிறது 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2024 08:59
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.