மகன்றில் களவு 11

அவனிடம் சேராத கடிதங்கள்

அலமாரிக்குள் ஒளிந்து கிடந்தன

அவள் Scarlet வண்ண நகப்பூச்சுக்கு ஏக்கம் காற்றில் பரவிய இருவாச்சி வாசம்

பின்னிக் கொண்ட விரல்கள் 

பசையிட்ட இறுக்கம் 

பின்கழுத்தில் உரசும் மீசை

பாதங்களில் என்றுமில்லாத கூச்சம்

தள்ளிவிட்டவளிடம் மெய் சொல்லவா என்றான் 

அருகே இழுத்து அவள் சொல்லிய

மந்தணத்தை இரு நிழல்களும் அறியும் 

கடிதங்கள் மெதுவாகத் தம்மை 

வாசித்து நாணுற்றன

அலமாரி இன்னும் இறுக்கமாய் பூட்டிக்கொண்டது

மாடத்தில் படர்ந்த நிழல் கண்டு

இருவாச்சிப் பூக்கள் பசந்தன


- வெண்பா கீதாயன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2024 19:32
No comments have been added yet.


Venba Geethayan's Blog

Venba Geethayan
Venba Geethayan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Venba Geethayan's blog with rss.