அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

 

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம்காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம்கண்ணில் படுபவர்கள் எல்லாம் புன்னகைக்கிறார்கள்தலையை அசைத்து “வாங்க” சொல்கிறார்கள்இன்னும் சிலர் கையெடுத்து வணங்கி வரவேற்கிறார்கள்யாரென்றே தெரியாதுஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது “சாப்டீங்களா” கேட்கிறார்கள்நண்பரின் நெருங்கிய தோழர்கள் 75 பேர் யூனிஃபார்மில் சுழல்கிறார்கள்கொஞ்ச நேரத்தில் எங்களை அறியாமலே நாங்களும்“வாங்க” சொல்கிறோம்“சாப்டீங்களா” கேட்கிறோம்Kalai Mani நான்கைந்து பேரை ”வாங்க சாப்பிடலாம்” என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போகிறாள்யாரென்று அவளுக்கும் தெரியாதுஅவள் யாரென்று அவர்களுக்கும் தெரியாதுபாப்பாவின் அம்மாவைப் பார்த்து“ஏம்மா, கல்யாணம் அவளுக்கா? உனக்கும் உங்க வீட்டுக்காரருக்குமா. சும்மா மெதக்கறீங்க” என்று கேட்கிறேன்வெட்கப் படுகிறார்அது ஒரு எளிய திருமணம்சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமல்லகலந்து கொண்ட எல்லோரது கண்களிலும் “அன்பு” தென்பட்டதுஎல்லோரிடத்தும் மகிழ்ச்சிபேரனந்தம்அப்படி ஒரு நிறைவை எல்லோரிடத்தும் காணமுடிந்ததுஇவை அத்தனையும் எங்களையும் அப்பிக் கொண்டதுஅப்பிக்கொண்ட அந்த அந்த அன்பும் சமாதானமும் இந்த வார்த்தையை தட்டச்சு செய்கிறவரை இருக்கிறதுஇன்னும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும்காரோட்டிய பிள்ளைக்கு அழைப்புமகிழ்ந்து பேசுகிறான். அப்படி கவனிச்சாங்கப்பா, சந்தோசம்னா சந்தோசம், வந்து சொல்கிறேன் என்கிறான்ஒரு எளிய திருமணம்போதாமை இருக்கும்கடன் இருக்கும்எல்லாம் கடந்துஅந்த அன்பு, புன்னகை, மகிழ்ச்சிநிறைவுஅன்பிற்குரிய என் நண்பர்களேஅவ்வளவு பெரிய ஆலயத் திறப்புஎவ்வளவு அதிகமான அன்பைத் தந்திருக்க வேண்டும்எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்எவ்வளவு ஆழமான சமாதானத்தைத் தந்திருக்க வேண்டும்ஆண்டவன் வீடு என்கிறீர்களேஎனில்,அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்
ஏன் இவை எல்லாம் விளையவில்லை?
ஏன் மண்ணெங்கும் வெறுப்பு?இப்போதும் சொல்கிறோம்ஆண்டவன் இல்லைஆனால் உண்டு என்று நம்பும் உங்கள் நம்பிக்கையை ஏற்கிறோம்உங்கள் தவறைச் சுட்டினால் ராமனை குற்றம் சொல்கிறோம் என்று தயவு செய்து திசை திருப்பாதீர்கள்அந்த ஆலயத்தின் மீது எங்களுக்கு புகார் இல்லைகட்டப்பட்ட இடம் மீதுதான்இப்போதாவது யோசியுங்கள்தவறு புரியும்எல்லோரையும் அரவணைத்து எதிர்காலத்தை அணுகுங்கள்”யாரொடும் பகை கொள்ளலன்” என்பது நீங்கள் கொண்டாடும் கம்பன் சொன்னதுஅன்புஅன்பு மட்டுமே இந்தியாவைக் கட்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2024 20:18
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.