இஸ்மாயில் ராவுத்தர் அவகளால் ஒரு பிள்ளையார் கோவில் தரப்பட்டிருக்கிறது
நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன்முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணியின் நான்காம் திருச்சுற்றில் நவாப் அவர்கள் அமைத்துக் கொடுத்த லிங்கம் இருப்பதைக் குறித்து அந்தக் கட்டுரை பேசும்அந்தக் கோவில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரியவில்லைஅது தேவையும் இல்லைஆனால் இந்துக்களின் வழிபாட்டிற்காக கடவுள் சிலைகளை, ஏன் கோவில்களை, வழிபாட்டிற்கான செலவிற்காக பணத்தை, நிலத்தை, நகையை இஸ்லாமியர்கள் கொடுப்பதும் வாடிக்கைஇது, இந்த மண்ணின் மிகப்பெரும் விழுமியம்இதுதான் சிலருக்கு எரிச்சலாக இருக்கிறதுஇந்த எரிச்சலுக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல ஒரு செய்தியை அண்ணன் G G Rajan Balachandran ஒரு தகவலைத் தருகிறார்எங்கள் ஊருக்கும் அருகில் உள்ள தோகைமலையில் 03.10.1968 இல் இஸ்மாயில் ராவுத்தர் அவகளால் ஒரு பிள்ளையார் கோவில் தரப்பட்டிருக்கிறதுஅந்தக் கோவிலும் இன்னும் இருக்கிறது

ஆதாரமான கல்வெட்டும் இருக்கிறது

இதுபோல் இன்னும் இன்னும் நிறைய இருக்கும்அறியத் தருவோம்இஸ்லாமியத் திருத்தளங்களுக்கும் இந்துக்கள் செய்தது ஏராளம் உண்டுநமது வேலைஅவற்றைத் தேடி எடுத்து அறியத் தருவதுதான்இது அன்பின் விளை நிலம்வெறுப்பால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை சொல்லிக்கொண்டே இருப்போம்
Published on January 03, 2024 19:46
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)