இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் – புது குறுநாவல் ’சிவிங்கி’யில் இருந்து

சொல்வனம் இணைய இலக்கிய இதழில் சிவிங்கி குறுநாவல் முழு வடிவில் பிரசுரமாகிறது

தேள்கள் ஆயிரம் ஆண்டு முன்பு வரை இந்தக் காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஆட்சி செய்து வந்தன. பொது ஆண்டு 5867இல் அணு ஆயுதப் பிரபஞ்சப் போரில் அவை அழித்தொழிக்கப்பட்டன.

விதிவிலக்கான உயிரினம்

தேளினத்தோடு கூட்டணி அமைத்திருந்த கரப்புகள் அணு ஆயுதப் போரில் தப்பிப் பிழைத்து அடுத்த பல ஆண்டுகள் தலைமறைவாயிருந்தன. பொது ஆண்டு 6000-வகை காலத்தில் அவை ஆரோக்கியமும், எதிர்ப்பட்டதை எல்லாம் தகர்க்கும் வெறியுமாக குகை எங்கும் படை எடுத்துச் சூழ்ந்தன.

எல்லா உயிரினங்கள் மேலும் பறந்து போய்ப் பாய்ந்து ஒட்டிக்கொண்டு கத்தி போன்ற கால்கள் கொண்டு முகம், தலை, பிரத்தியோக உறுப்பு என்று தேடித்தேடி ஊர்ந்து ஆழமான காயங்களை அவை உண்டாக்கின.

ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு என்ற அனைத்துக் குகைகளயும் ஆட்சி செய்யும் அரசமைப்பு கரப்பினத்தை முழுக்க அழித்தது. .

கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த நீளம் மிகுந்த குகையில் கரப்புகளின் அழிபடாத இன மிகுதி இன்னும் உயிர்த்திருப்பதாகவும், அவை வேண்டிய காலத்தில் வெளிவரும் என்றும் தொடுமொழிக் கதையாடல் சொல்லும்.

கரப்பு அழிப்பு ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிகழ்வாக, கரப்பினத்துக்கு சைகை மொழி, தொடுமொழி என்ற இரண்டு வலிமையான ஆயுதங்கள் கிட்டாமல் போனது காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டது.

நெகிழி, அசுத்த ஜட வஸ்து, ஜல வஸ்து, கழிவுநீர், போன்ற உணவும், அவற்றை உண்ணும்போது சூழ்ந்திருக்க புழுத்த வாடையோடு அபான வாயுவும் கிட்டாமல் கரப்புகள் இறந்து பட்டன.
காஸ்மோஸ் பிரபஞ்சம் குகை தோறும் ஓய்வாக இயங்கும் விடுமுறை தின இரவுப் பொழுது இது. குறைந்த பட்ச நடமாட்ட இரவு.

இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் இது என்று ஏற்கனவே குறிப்பிட்டு நாமும் கதையைத் தொடங்கினோம். இந்நானிலம் எங்கணும் நல்லிருளில், நல்லின்பத்தில் வாழ்க. யாமியற்றிய இந்நூல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 18, 2023 04:31
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.