சேடல் முகிழ் பொழுதது
மோதி விளையாடும் முகில்கள்
சிதறிய நூபுர முத்துப்பரல்கள்
அடர்வன ஓர் வகிடுப் பாதையில்
தேடிட நேரமன்று
என்றோ அவ்வழியே அவன் வரவு
தாள்தனில் உறுத்திய பரல்கள்
கணப்பொழுதில் அவள் உரு
எழுந்து அணைந்தது
வெறி கொண்ட அணங்கென
- வெண்பா கீதாயன்
Published on September 21, 2023 04:27