க்‌ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ

என் ப்ளாக் வேம்பநாட்டுக் காயலில் எழுதியது –
———————————————————————–
TUESDAY, JULY 26, 2005
க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ
—————————————-

நேற்று கேரளத் தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் (அதாவது அனந்தையில்) கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனாதிபத்ய முன்னணியின் கூட்டத்திற்கு முதல்வர் உம்மன் சாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தார். அதாவது, மதியச் சாப்பாடு எல்லாம் முடிந்தபிறகு.

“சாண்டி வந்திருக்கேன்”

பசிக் குரல்.

“ஐயோ சேட்டா, உச்சய்க்கு ஊணு எல்லாம் தீர்ந்து போச்சே”

“சரி, சாப்பாட்டுப் பாத்திரம் எங்கே? அதில் ஏதாவது மிச்ச மீதி இருந்தால் வழிச்சு எடுத்து வந்து போடுங்கப்பா”

போட்டார்கள்.

படு காஷுவலாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றபடியே அந்த மிச்சம் மீதியை உண்டார் முதல்வர்.

அவ்வளவு எளிய மனிதர் சாண்டி சார்.

இந்தச் செய்திக்கு இன்றைய மாத்ருபூமி கொடுத்திருக்கும் பழமொழித் தலைப்பு – “க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ” (கோவில் காவல்காரனுக்குச் சோற்றுச் சட்டியைச் சுரண்டித்தான் சாப்பாடு).

புகைப்படம் – நன்றி மாத்ருபூமி

RIP Umman Chandy sir

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2023 06:48
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.