சரவணன் மாணிக்கவாசகம் மதிப்பீடு – தினை அல்லது சஞ்சீவனி நாவல்

திரு சரவணன் மாணிக்கவாசகம் நாவல் தினை அல்லது சஞ்சீவனிக்கு எழுதிய மதிப்புரை

———————————————————————————–
முழுநீள Fantasy நாவல்கள் தமிழில் வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆங்கிலத்தில் Fantasy genre மட்டுமே படிக்கும் வாசகர்கள் உண்டு. ஆறு தலைகள், ஆயிரம் கைகள், சூரிய பகவானின் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்ற Fantasyகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாமும். புனைவில் Fantasy அம்சம் கலக்கையில் லாஜிக் என்பது இல்லாது போய் எதுவும் சாத்தியம் என்றாகி விடுகிறது. இவருடைய முந்தைய நாவலான மிளகு கூட Fantasy கலந்ததே, ஆனால் அதில் வரலாறு தான் முக்கிய பங்கு வகிக்கும்.

காலப்பயணம் என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டில் H G Wellsல் இருந்து யாரேனும் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த நாவலில் ஐம்பதாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு, பின் அங்கிருந்து இருபதாம் நூற்றாண்டிற்கு, பின் மீண்டும் ஐம்பதாம் நூற்றாண்டுக்கு. மூன்றாம் நூற்றாண்டுவாசியைத் தூக்கிக் கொண்டு வரும் பயணத்தில் எதிர்பாராமல் இருபதாம் நூற்றாண்டு மனிதனையும் ஏற்றிக் கொண்டு வர வேண்டியதாகிறது.

மனிதர்கள் பலருக்கு இருக்கும் நிறைவேறா ஆசைகள் பறப்பது, முடிவடையா போகம், சாகா வரம். இந்த மூன்று ஆசைகளுமே இந்த நாவலில் நிறைவேறுகின்றன. எழுத்தாளர்களின் ஆழ்மனதில் ஏதோ ஒன்று பதிந்திருந்து அவர்கள் அறியாது வெளிப்படும். இந்த நாவலிலும் எம்டன் குண்டு வீசும் சம்பவம் நிகழ்கிறது. ஒரு வயதுக்கு மேல் இருபது, முப்பதுவயதுப் பெண்கள் பெரும்பாலும் ஈர்ப்பதில்லை. நாவலில் அடிக்கடி நாற்பத்தைந்து வயதுப் பெண்களுடன் சேர்வது வருகிறது.

Cloning technologyஐ ஐம்பதாம் நூற்றாண்டில் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்களிடமிருந்து அதிகாரத்தை, தேள்களும், கரப்புகளும் கைப்பற்றிக் கொள்கிறார்கள், மூன்றாம், நான்காம் உலகப்போர்களைத் தாண்டியும் வாழ்ந்ததால். Banana Republicல் பெருந்தேளார் சர்வாதிகாரியாகிறார். இருவர் மனதுக்குள் பேசும் advanced telepathy வருகின்றது. Queer relationship இருபெண்களிடையே நடக்கிறது. பல விஷயங்களும் அடக்கப்பட்ட பெட்டி இந்த நாவல்.

ஏராளமான சம்பவங்கள் நடந்தும் முன்னுக்குப்பின் முரணாணவை எதுவுமே இந்த நாவலில் இல்லை. இரண்டாவது Fantasyஐ மட்டும் நம்பாது Scientifical factsம் நாவலில் கலந்திருக்கின்றன.

———————————————————————————-
முழு மதிப்புரை வாசிக்க இங்கே சொடுக்கவும்

நாவல் மதிப்புரை – தினை அல்லது சஞ்சீவனி

நன்றி திரு சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2023 20:05
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.