என் புது நாவல் ‘தினை’ – இந்த வாரம் திண்ணையில் அத்தியாயம் 6 – சில பகுதிகள்

என் புது நாவல் தினை அத்தியாயம் 6 திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. அதிலிருந்து –

இந்தப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததும் வானம்பாடி அதுவரை தங்கி இருந்த அரசு குடியிருப்பில் இருந்து குயிலியின் பெரிய இருப்பிடத்துக்கு வந்து விட்டாள். அரசுக் குடியிருப்பில் கரப்புத் தொல்லை அதிகம் என்று ஒரு தடவை அவசரமாகச் சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டாள் வானம்பாடி.

இரண்டு விதமாகப் பெரிய கரப்புகள் மானுடப் பெண்டிரைத் தொந்தரவு செய்வதுண்டு. அவர்கள் வீதியில் போகும்போது உருவம் சுருக்கி பறந்து அந்த பெண்ணின் மார்பகத்தின் மேல் அமரவும் உள்ளே ஓடவுமாக அவை விளையாடும். கால்களுக்கு நடுவே ஊரவும் அவை முனையும். கரப்புத் தொல்லை குறித்து பயப்பட்டு அலறி அழுவதும் உயிர் அபாயம் என்பதுபோல் ஓடுவதும் பண்பாட்டுக்கு எதிரான செயல்கள். ஆகவே அந்தப் பெண்கள் ஒன்றும் பேசாமல் தொல்லை பொறுக்க வேண்டும்.

இன்னொரு தொல்லை ஆகச் சிறுத்த உடலோடு அவை மானுட வீட்டு சமையலறை வாஷ் பேசினில் உறங்கி ஓய்வெடுக்க வருவது. வந்தால் விரட்டக் கூடாது என்பதும் எதிர் பண்பாடு தொடர்பான சமூக நாகரிகமாகும்.

தேளர் சமுதாயம் வலிமை மிக்கது என்று வரையறுக்கப் பட்டதால், வலிமை கொண்டு பிற இனங்களைப் பாதுகாப்பது அவர்களின் பொறுப்பாகும்.

போர்ச் சூழல் தவிர மற்ற சூழ்நிலைகளில் பிற இனங்கள், குறிப்பாக மனிதர்கள் வசிக்கும் இடங்களில் தேளர் இனம் தலைகாட்டக் கூடாது, தவறி வந்தால், மானுடர் யாரும் சொன்னால் உடனே அங்கிருந்து திரும்ப வேண்டும்.

கரப்பர்கள் தேளர்களை உபசரிப்பது அந்த இரு இனங்களுக்குப் பொதுவான விழுமியங்களைப் போற்றுவதில் தொடங்குவது.

”வானி.. அடி உன்னைத் தானடி வானம்பாடி. வாங்கினது போதும். நாம் காலத்தில் பின்னால் தான் போகிறோம். முந்திய ஜன்மத்துக்குப் போகலை”.

புது நாவல் தினை அத்தியாயம் 6

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2023 21:02
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.