இரவுகள் பொய் சொல்கிறது
விடிந்த உடன் இந்த
உலகம் புதிதாய் இருக்கும்,
உன் கவலைகள் கரைந்து ஓடும்,
உன் கனவுகள் மெய்படும்,
உன்னை நீ புதிதாய்ப் பார்ப்பாய்.
உறங்காமல் இருக்கும் என்னை
உறங்க சொல்லி
ஒவ்வொரு நாளும் இந்த
இரவு பொய் சொல்கிறது.
மின்னும் நட்சத்திரம்
பார் பாதி ஒளி வீசும் நிலவு என
வானத்தின் அழகை வர்ணித்து
இவை போல் இந்த மண் மீது
நீ ஒளிர்ந்து கொண்டு இருக்கிறாய்
என்று சொல்லி மாதத்தில்
பல நாள்(அம்மாவசை) என்னை இருள் சூழ
தனித்து விட்டு இந்த
இரவு பொய் சொல்கிறது.
காற்று வீசும் நேரம்
சிலிர்த்து கொள்ளும்
மரம் தாலாட்டும் என்...
Published on December 19, 2019 22:50