ராத்திரி வண்டி குறுநாவல் ரயில் வராத ராத்திரி

 

ராத்திரி வண்டி   குறுநாவல்   பகுதி 4 ஆ

 

வீட்டைத் துறந்து போட்டுட்டு இவனையும் தனியா விட்டுட்டுப் போகணுமா… கணபதி இருந்தாலாவது.. அட நூறு வயசுய்யா உனக்கு கணபதி…

 

‘கொஞ்சம் சார் கூடப் பேசிக்கிட்டு இப்படி வாசல்லே இரு கணபதி… நான் இதோ வர்றேன்..’

 

கணபதிக்கு அந்த சித்திரக்காரனைப் பார்க்கும்போதே சிரிப்பு வந்தது. ஒரு மாதிரிப்பட்ட ஆள். குஷால் பேர்வழி..நாலு பேர் பார்க்கவே மொட்டக் கட்டயாப் பொம்பளை பட போடறவன் இன்னும் என்னவெல்லாம் வரஞ்சு வச்சிருப்பான்..

 

‘சார்.. அந்தப் படத்தைப் போட்டு முடிச்சுட்டீங்களா?’

 

‘எந்தப் படத்தை?’

 

‘ஒரு பொம்பளை.. அட்டகாசமாப் போட்டிருந்தீங்க… எல்லாப் பசங்களும் அசிங்கம் அசிங்கம்னு சொல்லிட்டு அங்கனக்குள்ளே தான் பார்க்கிறான்… இந்த புக்கிங்க் கிளார்க்கு.. அய்யோ அய்யோன்னு அடிச்சுக்கிட்டாரே.. அஞ்சுமணிக் கருக்கல்லே ரயிலுக்கு டிக்கட் வாங்க வந்த பொம்பளையைக் கையைத் தடவிட்டு இருந்தாராம்… நம்ம சுப்பையா பெண்சாதி..தொடுப்பு உண்டுதானாம்… என்ன எளவோ.. நம்ம கண்ணுலே எல்லாம் பட்டுத் தொலைக்குது.. அந்தாளை மட்டும் விட்டா படத்தைத் தரையிலே கிடத்தி மேலே சாஞ்சிருப்பான்.. பொச கெட்ட மனுசன்..’

 

‘பத்துலே பொண்ணு மட்டும் இல்லியேப்பா.. இன்னும் எத்தனையோ விஷயம் இருக்கே.. அதெல்லாம் மேலே படுமே..’

 

’அது யாருக்கு வேணும்… நீங்க அந்தப் பொம்பளையைத் தனியா இப்படி விட்டுருக்கக் கூடாது.. பின்னாலேயே ஒரு பய படத்தையும் போட்டு வச்சா விஷயம் அமர்க்களமா இருக்கும்… சாயலுக்கு இந்த புக்கிங் கிளார்க் மாதிரி போடுங்க..’

 

‘சாரி மிஸ்டர் ராமச்சந்திரன்… இன்னிக்கு வேறே ஒரு டிரெயினும் இனிமே வராது..’

 

சீவகன் வந்து கொண்டே சொன்னான்.

 

பெட்ரோலும், குரூட் ஆயிலும் அடைச்ச போகி எல்லாம்… ஜாக்கிரதையா எடுக்கறதுக்கு ராத்திரி பூரா ஆயிடும்..’

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2022 19:16
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.