”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்”

டி.பி ஜெயின் கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி

சென்னையில் இருக்கிறது

”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்” என்று ஒரு இயக்கம் உருவாகி இருக்கிறது

அந்த அமைப்பின் சார்பில் 27.06.2022 அன்று காலை அந்தக் கல்லூரியின் வாயிலில் ஒரு போராட்டம் நடக்க இருப்பதாக அறிய முடிகிறது

SFI, DYFI, CITU, AIDWA உள்ளிட்ட அமைப்புகள் இதற்கான முன் முயற்சியில் உள்ளன

போராட்டத்திற்கான காரணம் மிக மிக முக்கியமானது

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பல பிரிவுகள் இருக்கும்

அவற்றில் சிலவற்றிற்கு அரசு உதவி கிடைக்கும்

அந்தப் பிரிவுகள் உதவி பெறும் பிரிவுக்கள் ஆகும்

மற்றவை சுயநிதிப் பிரிவுகள் ஆகும்

உதவிபெறும் பிரிவுகளுக்கான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கும்

சுய உதவிப் பிரிவுகளுக்கு அது கிடையாது

எனவே சுய உதவி பெறும் பிரிவில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை கல்லூரி நிர்வாகம் வழங்கும்

இதற்கான நிதியை மாணவர்களிடம் வசூலித்துவிடும்

செமையாக லாபம் தரும் இடம் இது

ஜெயின் கல்லூரியில் உதவிபெறும் பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களை சேர்ப்பதில்லை என்பது புகார்

புரியும்படி பேசுவதெனில்

இப்போது இயற்பியல் பாடத்திற்கு உதவிபெறும் பிரிவும் சுயநிதிப் பிரிவும் இருப்பதாகக் கொள்வோம்

40 + 40 என்ற வகையில் 80 மாணவர்களைச் சேர்க்கலாம்

தோராயமாகச் சொல்கிறேன்

உதவிபெறும் பிரிவிற்கு 15,000 ரூபாய் கட்டணம் என்றால் சுயநிதிப் பிரிவிற்கு 40,000

கொஞ்சம் கூடலாம் குறையலாம்

இப்போது இந்தக் கல்லூரியில் உதவி பெறும் பிரிவில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்றால்

சுயநிதிப் பிரிவில் சேர்க்கிறார்கள் என்று பொருள்

எனில் சுயநிதிப் பிரிவில் 80 குழந்தைகளும் சேர்க்கப் படுகிறார்கள்

ஆக 80 குழந்தைகளுக்கும் 40,000 கட்டணம் வாங்கி விடுவார்கள்

சட்டப்படி இவர்களுக்கு வரவேண்டிய கட்டணாம்

உதவி பெறும் குழந்தைகள் வகையில் 40 x 15,000 =6,00,000

சுயநிதி வழியில் 40 x 40,000 = 16,00,000

ஆகக் கூடுதல் 6,00,000 + 16,00,000 = 22,00,000

உதவி பெறும் பிரிவில் சேர்க்காததால் அனைவரும் சுயநிதிப் பிரிவு என்பதால் வரும் கட்டணம்

80 x 40,000 = 32,00,000

ஆக ஒரு பிரிவில் தோராயமாக இவர்கள் அடிக்கும் கொள்ளை 10, 00,000

எத்தனைப் பிரிவுகள்?

எத்தனை செமஸ்டர்கள்?

எனில் எவ்வளவு கொள்ளை

போக

உதவிபெறும் பேராசிரியர்களையும் ஊழியர்களையும் கொண்டே சுயநிதி பிரிவுகளுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்

இது பெரும் கொள்ளையும் குற்றமும்

அரசு அவசியம் இதில் தலையிட்டு இந்தப் புகார் உண்மை எனில் கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்

#சாமங்கவிய ஒரு மணி இரண்டு நிமிடங்கள்
26.06.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2022 06:24
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.