Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லை

1980 இல் எனக்கு ”Ode on a grecian urn" அறிமுகமாகிறது

அப்போது எனக்கு 17 வயதுநாம் இப்படியாகக் கொள்வதில் யாருக்கும் வழக்கெதுவும் இருக்கப் போவதில்லைஅப்படி யாருக்கேனும் பிராது இருக்கும் பட்சத்தில்முடிந்த இடத்தில் அந்தப் பிராதை அவர்கள் கொடுப்பதில் நமக்கும் வழக்கெதுவும் இல்லைஎந்த இடம் என்று தெரியவில்லைஏதோ ஒரு பாரிலோ தேநீர்க்கடையிலோ அல்லது வேறு எங்கோவோ இருக்கலாம்எங்கோவோ இருந்துவிட்டும் போகட்டும்ஒரு ஜாடியைப் பார்க்கிறான்மிக மிகப் பழங்காலத்து ஜாடிஅதன் கலைநயம் அவனை ஈர்க்கிறதுThou still unravish'd bride of quietness, Thou foster-child of silence and slow time,என்று கவிதையை ஆரம்பிக்கிறான்அந்த ஜாடியில் உள்ள ஓவியத்தில் மரங்கள் இருக்கின்றனகீட்ஸ் அந்த மரத்தைப் பார்க்கிறான்அந்த ஜாடிக்கு 200 வயது இருக்கலாம்என்றால் அந்த மரத்தின் வயது 200இதுவரைக்கும் அவன் அடைந்த ஆச்சரியம் அவனுக்கானது200 வயது மரம் சாத்தியம்ஆனால் 200 வயது இலை, அவன் வியப்பின் உச்சிக்கே போகிறான்மரத்தின் ஜனனத்தோடு பிறந்த இலைகள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழுக்காமல் சருகாகாமல் உதிராமல்அப்பப்பாகலை நிலையானதுசொக்கிப்போகிறான் கீட்ஸ்எழுதுகிறான்,Ah, happy, happy boughs! that cannot shed Your leaves, nor ever bid the Spring adieu;அந்த ஜாடியில் உள்ள படத்தில் ஒரு காதலன் தனது காதலிக்கு முத்தம் கொடுக்க முயல்கிறான்அவள் தப்பித்து ஓட முயற்சி செய்கிறாள்கீட்ஸ் எழுதுகிறான்,பயப்படாதே அவளால் அந்த இடத்தைவிட்டு நகர முடியாது. அவளது வனப்பும் எத்தனை ஆண்டு காலமானாலும் சிதையாதுநமக்கும் புரிகிறதுஒருபோதும் அவளை அவன் முத்தமிட முடியாதுBold Lover, never, never canst thou kiss,Though winning near the goal yet, do not grieve; She cannot fade, though thou hast not thy bliss, For ever wilt thou love, and she be fair!சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு பாடலுக்கான சூழலை கண்ணதாசனிடம் விளக்குகிறார்கள்மகாபலிபுரம்அங்குள்ள சிலைகளைப் பார்த்து அதிலும் அங்குள்ள ஒரு யுவதியின் சிலையைக் கண்டு வியந்து பாடுவதாக பாடல் வேண்டும்வேட்டியை சன்னமாக தூக்கிப் பிடித்தபடி கண்ணதாசன் சொல்லச் சொல்ல எழுதுகிறார்கள் “சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ணாக் கண்ணுக்குஆடை கொடுத்தான் அவள் உடலினிலேஆட விட்டான் இந்தக் கடலினிலே”ஆகா ஆகா“கட்டழகு வாலிபர் தொட்டுப் பார்க்ககவிஞர்கள் தமிழால் தொட்டுப் பார்க்கபொட்டு வைத்தப் பூங்கொடி போட்டி போடபொல்லாத பருவத்தை கல்லாக்கினேன்” என்று நகருவார்அந்த சிலையை பார்த்த வாலிபர்களுக்கு அதைத் தொட்டுப் பார்க்கத் தோன்றுமாம்கவிஞர்களிடம் கவிதை துள்ளுமாம்பெண்களுக்கு போட்டியான அழகாம்இதெல்லாம் விடுங்கள்இதுவரை ஒரு பெண்ணை கல்லில் சிலையாக வடித்ததாகத்தான் வரும்அது பெண் மட்டும் இல்லையாம்பொல்லாத பருவத்தை கல்லாக்கி நிலைக்கச் செய்தானாம் சிற்பிபருவத்தை சிலையாக்கி அய்யோ அய்யோ கண்ணதாசாஅடுத்த சரணத்தில் ஒரு வரி வரும்“பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்”பருவத்தின் சாறை கல்லில் கலையாக்கும் வித்தையை பாடலில் பந்தி வைப்பார் கண்ணாதாசன்அநேகமாக இறுதி சரணம் என்று பார்க்கிறேன்“அன்னமிவள் வயதோ பதினாறுஆண்டுகள் போயின ஆறு நூறுஇன்னும் இவள் முதுமை எய்தவில்லைஎன்னதான் ரகசியம் தெரியவில்லை”கீட்ஸ் ஜாடியில் உள்ள ஓவியத்தைப் பார்த்து கவிதை எழுதுகிறான்கண்ணதாசன் மகாபலிபுரத்து சிலைகளைப் பார்த்து ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதுகிறார்இசை சூப்பர்நடனம் சிறப்புஎல்லாம் கடந்து பிரச்சினை என்னவெனில்Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லைஒரு திரைப்படப் பாடல் உலகம் கொண்டாடிய ஒரு கவிதைக்கு கொஞ்சமும் சளைத்ததாக இல்லாமல்நிமிர்ந்து நிற்கிறதுஆனாலும் அது கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு கொண்டாடப் படவில்லைநம்மிடம் ஏதோ தவறு இருக்கிறதுமொழிபெயர்க்காத தவறாகவும் அது இருக்கக் கூடும் #சாமங்கவிந்து 10 நிமிடங்கள்17.06.2022Active
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2022 00:50
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.