பொய்மனிதனின் கதை - புத்தகம்


ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக பார்த்தது. உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.
“பொய் மனிதனின் கதை” புத்தகம் பாரதி புத்தகாலயத்தால் கொண்டு வரப்பட்டிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
கடை எண்: F4கீழ்க்காணும் அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகம் 136 பக்கங்களைக் கொண்டது. விலை ரூ.125/-
அத்தியாயங்கள்:
1. சேட்டன் பகத் ஏமாந்தார்2. மோடிபாய் பி.ஏ., எம்.ஏ3. “நரேந்திர மோடியின் மனைவியாகிய நான்... “4. “அந்த‘சதி’ இன்னும் நிரூபிக்கப்படவே இல்லை!5. பழைய மனிதரானார் அத்வானி6. அம்பானியின் தங்க விளக்காய் குஜராத்7. “புதியமனிதா, பூமிக்கு வா”- கார்ப்பரேட்களின் பாட்டு8. மோடிக்கென்று குடும்பம் இருந்தது!9. பாவம், பூஜா ஜாதவ் என்ன செய்வாள்?10. இந்தியாவின் ஒரு மூலையில் மூணாறு இல்லை!11. பக்கோடா விற்க படிப்பு எதற்கு?12. கங்கை அசுத்தமாகவே ஓடுகிறது13. “மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட்இருந்தது!”14. ராம்கிஷன் கிரேவாலை யார் கொன்றார்கள்?15. பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நம்பியவர்கள் தானே!16. குழந்தைகளே இல்லாத ஒரு கிராமத்தின் கதை!17. அவர்கள் இருவருமே ‘மற்றவர்கள்’18. “ஏன் பிரதமரே, எங்களைக் கைவிட்டீர்கள்?”19. டெல்லியை உழுது விதைத்துச் சென்ற விவசாயிகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2022 19:12
No comments have been added yet.