அதிகாலை ஐந்து மணிக்கு போன் அடித்தால் பெரும்பாலும் எனக்குக் கேட்காது. அதிசயமாக எழுந்து மொபைலை எடுத்தேன். தங்கை. அப்பா இறந்து விட்டார் என்று தோன்றியது.போனை எடுத்தேன். “அப்பா…” “ஆமாண்ணா.“ அப்பாவுக்கு இப்போது சாகும் அளவுக்கு ஏதுமில்லை. அவர் சாவை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அதனால், தங்கையின் அழைப்பைப் பார்த்ததுமே அப்பா இறந்து விட்டார் என்று எனக்குத் தோன்றியது ஆச்சர்யமானது ஆகிறது. எனக்கு இல்லை, உங்களுக்கு. எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆளுக்கு ஒரு ஊரில் இருந்தோம். அதனால் எப்படிச் செல்வது ...
Read more
Published on October 07, 2021 05:32