மிளகு நாவல் சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 45 அத்தியாயங்கள் (கிட்டத்தட்ட 450 பக்கங்கள்) முதல் பிரதியாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் 40 அத்தியாயங்கள் synopsis எழுதி வைத்திருக்கிறேன்.
நாவலின் பரல்கள் (நான்கு அல்லது ஐந்து பத்தி)எந்த வரிசையிலுமின்றித் தினமும் முகநூலில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நாவல் அத்தியாய வரிசையில் சொல்வனம் இணைய இலக்கிய பத்திரிகையில் தொடராக வெளிவரத் தொடங்கியுள்ளது. முதல் இரண்டு அத்தியாயங்கள் முழுமையாக இதுவரை வெளியாகியுள்ளன.
மிளகு ஒரு சரித்திர நாவல். மிளகு time space continuum குறித்த ஒரு அறிவியல் நாவல். மிளகு அரசூர் வம்சத்திலிருந்து சுவடு விட்டுப் போகும் ஒரு சமூக நாவல்.
தமிழில் இதுவரை எழுதப்படாத வகை நாவல் மிளகு.
வாசக நண்பர்கள் முகநூலிலும், சொல்வனத்திலும் நாவலை ஆர்வத்துடன் படிப்பதாகத் தனி உரையாடல்களில் அறிகிறேன். என்றாலும் லைக் எல்லாம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.
வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். இவன் என்ன எழுதிக் கிழிக்கப் போகிறான் என்று உதாசீனத்தோடு உதடு சுழித்துக் கடந்து போகிறவர்களுக்கும் அதே அன்பான வாழ்த்துகள்.
Published on August 06, 2021 23:10