வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ : மீன் உண்ட போது

நான் விருப்பப்பட்டால் மீன் மற்றும் கடல் பிராணிகளை உண்ணலாம். ஆனால் எனக்கு அந்த மாதிரி உணவு ஏற்றுக்கொள்ளாததால் ஏதோ ஒரு தினம், ஒரு சிறு வட்டிலில் எடுத்தது என்று ருசி பார்க்கிறேன்.

விஜயநகரப் பேரரசர் விருந்துக்குக் கூப்பிடும்போது அசைவமும் சைவமும் என்ன எல்லாம் அந்தப் பருவத்தில் கிடைக்கிறதோ அது எல்லாம் சமைக்கப்பட்டு விருந்து மண்டபத்துக்கு வந்து சேர்ந்து விடும்.

அங்கே விருந்து ஒரு நீண்ட சம்பிரதாயம் சார்ந்த நிகழ்ச்சி. சாப்பிடுவது நம் வயிற்றுக்காக இல்லை. வேண்டப்பட்டவர்களோடு கூடி இருந்து பேசிச் சிரித்து அவசரம் காட்டாமல் மெல்ல மென்று உண்ணும் சம்பிரதாயம்.

எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறோமோ அவ்வளவு விரைவில் பேரரசர் கவனிப்பிலிருந்து விலகி விடக் கூடும். போன விருந்தின் போது, அது நாலு நாள் முன், பௌர்ணமி ராத்திரி விருந்தில், நான் பயணம் போக விருப்பப் பட்டதாக வெங்கட தேவராயரிடம், என்றால் விஜயநகர் அரசரிடம் அறிவிக்கும் முன் சாதம், இறைச்சி, காய்கறி என்று மூன்று பேர் சாப்பிடும் அளவு உண்டபடி அவர் நோக்கக் காத்திருந்தேன்.

காசி ராமேசுவரம் போக சென்னாதேவிக்கு எண்பது வயதாகட்டும். லிஸ்பன் போவதாக இருந்தால் சென்று வரட்டும். நம் அரசு வட்டத்தில் வெளிநாடு யாரும் போனதில்லை. நான் கூடப் போனது இல்லை. சென்னா போர்த்துகீஸ் மொழி கற்றுக் கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்றாரே பார்க்கணும்.

இப்படி அவர் சொன்னபோது பகடி செய்கிறாரா, கண்டிப்பை உள்ளே வைத்த நகைச்சுவையாகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை.


படம் நன்றி commons.wikimedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2021 19:52
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.