நான் எழுதும் கவிதைகள் சராசரியானவை என்று ஒரு கருத்து நிலவுகிறது என்பது எனக்குத் தெரியும். என் புனைகதைகள் பற்றி அப்படி யாருமே சொல்ல முடியாது. பிடிக்கவில்லை என்பார்கள். போர்னோ என்பார்கள். இன்னும் சிலர் என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக் கண்டு அது நான் தான் என மருட்சி கொண்டு இவனைத் தூக்கில் போட வேண்டும் அப்படி இப்படி என்று பலவிதமான தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப் பலவிதமாகத் திட்டுவார்களே ஒழிய சராசரி என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ...
Read more
Published on February 03, 2021 04:51