சீரியல் சிறுவிளக்குச் சிங்காரம் செய்து
இரவு படிப்பித்தபடி கண்சிமிட்டி நின்ற
வன்மரங்கள் கண்ணயர்ந்த விநாடி
பம்மிப் பதுங்கி நுழையும் காலைக்குளிர்
மெய்தழுவி ஓர்நொடி தவழ்ந்து
ஓடிமறைந்து மறுநொடி மறுபடியும்
புறம்புல்கும் முன்பனிக் காற்றை
இந்தப் படம் சொல்லும்வரை
ஏதோ எழுதித்தான் தீரணும்
Published on December 21, 2020 18:10