இதையும் இன்றுதான் வாசிக்கிறேன்

 திரு. ஜானகிராம்மூர்த்தி ஒரு வழக்கறிஞர்

நெல்லூர்க்காரர்

பார்ப்பனர்

16.09.1926 அன்று நீலா வெங்கட சுப்பம்மா என்கிற பெண்ணை இரண்டாந்தாரமாக சென்னையில் மணக்கிறார்

இவர் ஒரு திராவிடர்

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர்

ஜானகிராமமூர்த்தி காலமாகிறார்

நீலா அம்மையாரை ஜானகிராமமூர்த்தியின் முதல் மனைவி ஒதுக்குகிறார்

இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு தனது கணவரின் சொத்துக்களை அனுபவிக்கும் முதல் மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஜில்லா கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்

மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் என்பது தீர்ப்பு

முதல் மனைவி உயர்நீதிமன்றம் போகிறார்

கனவான்கள் திரு பாண்டுரங்கராவ் மற்றும் திரு சோமையா நீதிபதிகள்

இருவரும் பார்ப்பனர்கள்

ஆரியர் திராவிடர் கலப்புமணம் செல்லாது என்பது தீர்ப்பு

அண்ணாவின் ஆரியமாயையில் இருந்து இந்த சம்பவம் எடுத்தாளப்பட்ட 03.11.2020 நாளிட்ட விடுதலையை

இன்று வாசித்தேன்

இது

பிராமணனுக்கும் அவனது சூத்திர மனைவிக்கும் பிறக்கும் குழந்தைக்கு அவனது தந்தையின் சொத்தில் உரிமை இல்லை

என்கிற மநுதர்மத்தின் உத்தரவை ஒட்டியதுதான்

20.04.2019 அன்று கமல் இட்ட ட்விட்டரை தோழர் M S Rajagopal அவரது பக்கத்தில் வைத்திருக்கிறார்

அதில் இசைஞானியோடு இணைந்து மருதநாயகத்திற்காக அவர் எழுதிய பாடலில் இருந்து

"மதங் கொண்டு வந்தது சாதி

மனிதனை விரட்டுது

மநு சொன்ன நீதி"

என்ற வரிகளை வைத்திருக்கிறார்

இதையும் இன்றுதான் வாசிக்கிறேன்

ஒன்றரை வருடத்தில்

மநுசாஸ்திரம் இப்போது புழக்கத்தில் இல்லை. எனவே அதுபற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்கிற கமலின் கூற்றையும்

இன்றுதான் பார்க்கிறேன்

#சாமங்கவிந்து2மணி17நிமிடங்கள்

05.11.2020

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2020 11:11
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.