ஆண்டன் செகாவ் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களை என் சக எழுத்தாளர்களும் வாசகர்களும் வியந்து வியந்து போற்றும் போது செகாவுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத – இன்னும் சொல்லப் போனால் – அவரிலும் மேம்பட்ட நம் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி யார் பேசுவார், எப்போது பேசுவார் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து போவது என் வழக்கம்.  பச்சைக் கனவு என்று ஒரு கதை.  ஜனனி என்று ஒரு கதை.  வேண்டப்படாதவர்கள் என்று ஒரு கதை.  லாசராவைப் போய் புரியாமல் எழுதுகிறார் ... 
Read more
  
        Published on July 19, 2020 02:51