துன்பம் இன்பமாகும் குறள்!
[image error]திருக்குறளில், “இன்பம்” எங்கெல்லாம் வருது? = தேடிப் பாருங்க!
kural.muthu.org
துன்பமே, எப்பிடி இன்பம் ஆவுது? -ன்னு தெரிஞ்சிப் போகும்!:)
* அவன் இல்லாமல் இருப்பது = துன்பம்
* ஆனா, அவன் இல்லாத போது, அவனையே எண்ணியெண்ணி ஏங்குதல் = இன்பம்:)
சரியான, லூசுப் பொண்ணா இருப்பாப் போல!
டேய் முருகா, நான் அப்படியெல்லாம் இல்ல; நான் உன்னை நினைக்கவே இல்ல! இல்லவே இல்ல:)
துன்பம் உற வரினும் செய்க – துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை;
(பொருட்பால் – வினைத் திட்பம் – 669)
இன்பம் கடல் மற்றுக் காமம் – அஃது அடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது;
(காமத்துப் பால் – படர் மெலிந்து இரங்கல் – 1166)
அடிக்கோடு இட்டவை – என்ன தொடை? -ன்னு சொல்லுங்க:)
காபி உறிஞ்சல்:
1) துன்ப-இன்பம்
துன்பம் உற வரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
(முடிவிலே) இன்பம் தரப்போகும் ஒன்றைச் செய்யும் போது
(துவக்கத்திலே) துன்பம் மிக வந்தாலும், துணிவு மேற்கொண்டு, அதைச் செய்து முடிக்க வேண்டும்!
2) இன்ப-துன்பம்
இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது
காமம் = மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
காமம் = வருத்தும் போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது;
இப்பிடி, ஒரே உவமை (கடல்),
இரண்டுக்கும் ஆகி வருவது என்ன அணி? I dunno, u tell me plz:)
dosa 103/365
Kannabiran Ravishankar's Blog
- Kannabiran Ravishankar's profile
- 16 followers
