நவகண்டம் [சிறுகதை]
வியர்வையூறிய நிர்வாணத்தின் திகட்டாத தித்திப்பில் விழிகள் சொக்கிக் கிடந்தாள் கொற்றவை. அவள் அதரங்கள் மந்திர உச்சாடனம் போல் அச்சொல்லை உச்சரித்தன.
“ருத்ரா…”
அவளது செந்தேகத்தில் சிதறிக் கிடந்த ருத்ரன் சிரமுயர்த்தி அவள் முகம் பார்த்தான்.
“குலப்பெண்டிர் புருஷனைப் பெயர் சொல்லி அழைப்பதிங்கு வழக்கமில்லை, தேவி.”
“கட்டிலில் கட்டுப்பாடுகள் செல்லாது. விளக்கணைத்தபின் விதிகளுக்கென்ன வேலை?”
ருத்ரனின் பின்னந்தலை மயிர் பற்றியிழுத்து அவன் வாயைக் கவ்விக் கொண்டாள்.
முத்தம் தீர்ந்து களைத்த போது ருத்ரன் அவளது பின்னங்கழுத்தின் கூந்தலில் முகம் புதைத்தான். அடர்ந்து செழித்த மயிர்க்காட்டிலிருந்து மனோரஞ்சித மணம் எழுந்தது.
மூச்சை நன்றாக இழுத்து தன் நெஞ்சுக்கூடு முழுக்க அந்த நறுமணத்தை நிரப்பிக் கொண்டு அவள் காது மடல்களை மெல்லக் கடித்தபடியே கிசுகிசுத்தான் ருத்ரன்.
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.”
“ஓஹோ! நீங்களும் பல மலரை ருசி கண்ட தும்பி தானோ?”
“இந்தக் குறிஞ்சிப் பூவை அளந்தவனுக்கு மற்றதெல்லாம் நெருஞ்சியல்லவா!”
தேனில் நீந்தும் வண்டின் கிறக்கத்துடன் கொற்றவை புன்னகைத்தாள். அக்கணத்தில் உலகமே பேரழகாகத் தோன்றியது ருத்ரனுக்கு. இந்த உலகில் மிக மகிழ்ச்சிகரமான மனிதர்கள் தாங்கள் என்றும். மேலே ஒரு விண்மீன் பளபளத்து அதை ஆமோதித்தது.
பற்குறி பதிந்த உதட்டுக்கடி வலி தலைக்கேற சட்டென நினைவு மீண்டான் ருத்ரன். உண்மையில் அவன் சுண்டுவிரலில் போட்டிருந்த சிறுகட்டு தான் லேசாய் எரிந்தது.
ராஜபாட்டையைக் கடக்கும் நத்தைபோல் யாமம் ஊரின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. காற்று மரங்களில் புகுந்து இலைகளுடன் புணர்ந்து சலசலத்தது. அது சோழ நாட்டின் பகுதி. பொன்னமராவதி என்பது அதன் பெயர். அந்நிலத்தின் கீழ் பல போர்க்கதைகள் தகித்திருந்தன. ஆனால் அவ்விடம் நீரில் அமிழ்த்தியது போல் சில்லிட்டுக் கிடந்தது.
கூதிர் காலத்தில் போருக்குப் புறப்படும் அரச கட்டளை பிழையோ என யோசித்தான்.
சுற்றிப் பார்த்தான். படை வீரர்கள் பொறுக்கிய சுள்ளிகளைக் குவித்து நெருப்பேற்றிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆரவாரமாய்ப் பாண்டிய மன்னனின் வெற்றியைப் பறைசாற்றுமொரு நாட்டுப்பாடலை தாள ராகம் பற்றிய கவலையற்று இசைத்துக்கொண்டிருந்தனர். இடையே சிரித்தும் பேசியும் ஆடியும் என அவ்விடத்தில் உற்சாகம் மூண்டிருந்தது. ஆனால் அவர்களில் எவரின் நாவிலும் ஒரு துளி மதுவும் இறங்கியிருக்கவில்லை என்பதை ருத்ரன் அறிந்திருந்தான். அது யுத்த வெறி. ரத்த வெறி. வெற்றிக்கான வெறி. அவர்கள் மூட்டியிருந்த தீ ஜ்வாலைகளின் அசைவைப் போலவே ஒழுங்கற்று ஆனால் பற்றியெரியும் அடர்த்தியான வன்மத்துடன் இருந்தது அவர்களின் நடனமும். அதைக் கண்டரண்டு நிலவு காணாமலாகிக் கொண்டிருந்தது.
ருத்ரனுக்கும் குளிர் உடைகளை ஊடுருவி உள்ளே பாய்ந்தது. ஆனால் அந்நேரத்தில் அவன் அவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பவில்லை. இரண்டு காரணங்கள். அவன் அவர்களின் தளபதி. அவன் முன் அவர்கள் அமர்வது கூட மரபல்ல. அவன் அங்கே சென்றால் மரியாதை என்ற போர்வையில் அவர்கள் தம் இயல்பைப் புதைப்பார்கள். அவன் பொருட்டு சொல்லிலும், செயலிலும் பாசாங்கு நுழையும். கொண்டாட்டங்கள் குறையும். அதை அவன் கிஞ்சித்தும் விரும்பவில்லை. அவர்கள் தமது பிரியப்படி இன்று இருந்தால் தான் நாளை வேண்டிய மூர்க்கத்துடன் போரில் ஈடுபடுவார்கள்.
போரில் எப்போதும் படைக்குப் பக்கமிருக்கும் தலைவன் மற்ற நேரங்களில் சற்றுத் தள்ளியிருப்பதே அவர்களுக்கு நல்லது, தலைவனுக்கும் நல்லது. இத்தனையாண்டு அனுபவத்தில் ருத்ரன் கற்றது இது. அவன் அங்கு போகாமைக்கு முதற்காரணம் இது.
இரண்டாம் காரணம் ருத்ரனுக்குக் கொஞ்சம் தனிமை வேண்டியிருந்தது. அவனும் அவன் சிந்தனைகளும் மட்டும் தொந்தரவற்றிருக்கும் தனிமை. நினைவுகளைத் தடை இன்றி அசைபோட உதவும் தனிமை. சுயவெறியேற்றிக் கொள்ள உதவும் தனிமை.
“நிஜமாகவா சொல்கிறீர்கள்?”
நெய் மணந்த ஊன்பொதிசோற்றை ருத்ரன் தட்டில் எடுத்து வைத்தபடி கேட்டாள்.
“ஆம், கொற்றவை.”
“குலோத்துங்கன் மதுரை மீது படையெடுத்து வருவதாகத் தான் கேள்விப்படுகிறேன். தகவல் உறுதியில்லை. ஆனால் அரண்மனையில் கிசுகிசுக்கிறார்கள். தளவாடங்கள் அவசரமாய்த் தயார்நிலைக்குப் போவதை நானே கண்கூடாகப் பார்க்கிறேன். போரை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான அத்தனை சமிக்ஞைகளும் இங்கு தென்படுகின்றன.”
“ஆச்சரியம். அந்தப்புரத்தில் அதற்கான அறிகுறிகளே இல்லையே!”
“உலகமே அழியவிருந்தாலும் அந்தப்புரம் தான் அதில் கடைசி.”
“ம். ஆனால் நான் பாண்டிமாதேவியின் பிரதான அலங்காரப் பொறுப்பு. தினமும் அவர் வனப்பும் வாசனையும் பூரணமாய் என் தீர்மானம். மஹாராணி அறிந்த யாவும் நான் அறிவேன். முந்தைய இரவு குலசேகர மன்னர் அவரைத் தீண்டினாரா என்பது வரை.”
“பட்டத்தரசிக்கே இவ்விஷயம் தெரிந்திருந்தால் தானே!”
“ஓ!”
“ஆம். மிகத்தாமதமாகவே நம் ஒற்றர்களுக்கு செய்தி தெரிய வந்திருக்கிறது போலும்.”
“ஆக, அந்தப்புரக்காரிகளை விட அரசுக் கணக்காளருக்கு அதிகம் தகவல் தெரிகிறது.”
“எனக்கு மட்டும் என்ன தெரியும்! எல்லாம் நம் ஆயுதக் கிடங்கு கந்தன் சொன்னது.”
“ஓ!”
“தவிர, அரசியல், ராஜாங்கம் என்பதெல்லாம் ஆண்களுக்கானது, தேவி.”
“ஆம், பெண்கள் எப்போதும் அதில் பகடைக் காய்கள் தாம்.”
“நிஜம் தான். சொல்லப்போனால் சரியும் கூடத் தான். அது ஒரு சொகுசு அல்லவா!”
“ம். ஏன் நம் மீது போர் தொடுக்கிறார்கள்?”
“போர்கள் முதலில் நடக்கும். பிறகு தான் காரணங்கள் கண்டுபிடித்து எழுதுவார்கள்.”
“ம். எப்போது சோழப் படை நம் நகரில் நுழையும்?”
“அனேகமாய் நாளை காலை என்கிறார்கள். அதிகபட்சம் நண்பகல்.”
மறுநாள் அமாவாஸ்யை. அதைத் தான் தாக்குதலுக்குரிய நாளாகத் தேர்ந்திருந்தான் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன். ராஜகுருவின் ஆலோசனை அது.
சுந்தர பாண்டியன் முடிசூடிக் கொள்கையில் செய்த சபதம் நாடெங்கும் பிரசித்தம்.
“இந்தப் பாண்டிய நாடு கொண்ட அவமானத்திற்குப் பதிலீடாகச் சோழ நாட்டின் மீது படையெடுத்து அதை வீழ்த்தியே தீருவேன். இன்றிலிருந்து ஆறு திங்களுக்குள் இதை நிறைவேற்றி சோழ கிரீடம் சூடுவேன். அப்படி ஒருவேளை செய்து முடிக்காவிடில் காளிக்கு என்னை நவகண்டம் தருவேன். இது மீன்கொடி பறக்க விட்ட என் பாண்டியமுன்னோர்கள் அத்தனை பேர் மீதும் ஆணை. என் தமையன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மீது ஆணை. பாண்டிய ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த மன்னன் குலசேகரப் பாண்டியன் மீது ஆணை. பாண்டவர்களுக்குத் தோள் கொடுத்து குருஷேத்ர யுத்தம் கண்ட மன்னன் மலையத்வஜ பாண்டியன் மீது ஆணை. அவனது புத்திரியும், மதுரை திருக்கோயிலில் உறைந்திருப்பவளுமான அரசி அன்னை மீனாக்ஷியின் மீது ஆணை.”
மதுரை மாநகர் முழுக்க அச்சபதம் இளைஞர்கள் மத்தியில் பாவனை செய்யப்பட்டது. அப்படி இருந்தும் அது சோழர் தேசத்தை எட்டாதிருந்தது ஆச்சரியம் தான். அவர்கள் பாண்டிய நாட்டை வென்றும் பெரிதாய் ஏதும் ஆதிக்கம் செலுத்தவில்லை. வரி வந்து சேர்ந்தால் போதும் என்று இருந்து விட்டார்கள். அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும் அளவுக்குக் கூடப்போகவில்லை. அது நம்பிக்கை அல்ல; அலட்சியம்.
மன்னரின் கூடாரத்தைத் திரும்பிப் பார்த்தான் ருத்ரன். உச்சியில் பறந்த இரட்டைக் கயல் கொடி அதை எளிதில் அடையாளங் காண உதவியது. அப்படிச் சுலபமாய்ப் பிரித்தறிய முடிவது பாதுகாப்பானதல்ல என்கிற முணுமுணுப்புக்கள் படையினர் மத்தியில் இருக்கத்தான் செய்தது. கூடாரத்தில் விளக்கெரிந்தது. மன்னர் இன்னும் விழித்திருக்கிறார் என்று பொருள். இரண்டாம் ஜாமம் முடிய இன்னும் ஒரு நாழிகை தான் இருக்கும். அவர் உறங்கப் போக வேண்டிய நேரம். வைகறையில் துயிலெழ வேண்டும். அனேகமாய் நாளை உச்சிவெயில் வேளையில் யுத்தம் துவங்கி இருக்கும்.
மஞ்சத்தில் துயில வேண்டிய சுந்தர பாண்டியன் இங்கே கொசுக் கடியில் புரண்டிருக்க ஒரே காரணம் தான். மானம். அதன் பொருட்டு அவன் மீது எப்போதுமே ருத்ரனுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மானம் என்பது ஒரு கற்பிதம் தானே என்றும் தோன்றியது.
கொற்றவையும் ருத்ரனும் பரஸ்பரம் கண் பார்த்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தனர். இருவரின் கரங்களும் ஒருவர் மீது ஒருவர் படர்ந்திருந்தன. ஒருவர் பேச மற்றவர் காத்திருந்தது இருவருக்குமே புரிந்தது. இறுக்கம் அவர்களிடையே விரவிக் கிடந்தது.
ஈராண்டு மண வாழ்வில் அது புதிது. இறுதியில் கொற்றவையே மௌனமுடைத்தாள்.
“போர் குறித்து அஞ்சுகிறீர்களா?”
“ம்.”
“நீங்கள் கவலைப்படாதீர்கள். நாடு நிற்கும். எத்தனையோ போர்கள் கண்ட மண் இது.”
“அதில்லை…”
“நம் மன்னரின் வீரம் குறித்து உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?”
“ம். இல்லை. அவர் திறமையான நிர்வாகி மட்டுமே. போருக்குரியவர் அல்லர். சாது.”
“அதே தான்.”
“ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது? நாம் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? பாண்டிய நாடு அடிமையானால் ஆகட்டும். எல்லோருக்கும் ஆனது தானே நமக்கும்!”
“என் கவலை நாட்டைப் பற்றியதல்ல…”
“சொத்துக்களை இழக்க நேரிடும் என்பது பற்றியா?”
“அதுவும் இல்லை. அதை மீண்டும் சம்பாதிக்கும் சாமர்த்தியம் உண்டு எனக்கு.”
“பின் என்ன தான் மனக்கிலேசம் உங்களுக்கு?”
“தேவி, போர் வெறியில் மதுரையில் காலடி எடுத்து வைக்கும் சோழர்களின் நோக்கம் நாடும் நிலமும் பொன்னும் பொருளும் மட்டுமல்ல. பாண்டியதேசப் பெண்களும்தான்.”
“இதுதானா உங்கள் கவலை! அப்படி ஏதும் நடந்தால் உயிரை மாய்த்துக் கொள்வேன்.”
ருத்ரன் பதறி அவள் வாயைப் பொத்தினான். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“இல்லை தேவி. அப்படிச் சொல்லாதே. அதெல்லாம் நடக்காது. ஆனாலும் பேச்சுக்குச் சொல்கிறேன். அம்மாதிரி ஏதும் நிகழ்ந்தாலும் அவர்களால் அதிகபட்சமாய்த் தீண்ட முடிந்தது உன் உடலை மட்டும் தான். உன் மனதில் இடம் பிடித்து விட முடியுமா? அதில் என்னைத் தவிர எவரும் நுழைய முடியுமா? பெண்ணுடல் மீதான அத்துமீறல் என்பது உடையில் நேரும் சிறுகறை போன்றதே. அதற்காக எவரேனும் உடையையே எரிப்பார்களா? அதனால் ஒருபோதும் நீ அந்த முடிவுக்கு வரக்கூடாது. இது என் மீது ஆணை. இதை உன்னிடம் அழுந்தச் சொல்லத் தான் இத்தனை நேரம் தயங்கினேன்.”
“இன்னொருவன் கைபட்ட பின் நான் ஒரு நடைபிணமாகி விடுவேனே. உங்களுக்கு மட்டுமே படைத்த உடலை எவனோ ஒருவன் கொத்தியுண்ணக் கண்டிருக்குமோ என் ஆன்மா? அக்கணமே மாயாதோ? மிஞ்சினாலும் அவன் எழும் நேரம் தெறிக்காதோ?”
“இல்லை. இல்லவே இல்லை. கூடாது. இன்னொன்றும் சொல்கிறேன். ஒருவேளை அவர்கள் உன்னைப் பலவந்தமாய் சோழ நாட்டுக்குத் தூக்கிச் செல்லவும் கூடும். நீ அப்போதும் கூட இம்மாதிரி மரணத்தைக் கைகொள்ளும் முடிவில் இறங்கக்கூடாது.”
“ஓ! எனில் தஞ்சை மாநகரில் நானொரு பரத்தையாகக் காலம் கழிக்க வேண்டுமா?”
கொற்றவையின் கேள்வியில் சினம் இருந்தது. அவள் கண்கள் சிவந்திருந்தன. அவை கழிவிரக்கத்தில் எந்நேரமும் உடைந்து கசிந்துருகத் தயாரான நிலையில் இருந்தன.
“கோபப்படாதே கொற்றவை. நான் மிகத் தீவிர யோசனைக்குப் பின்பே சொல்கிறேன்.”
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.”
“…”
“ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பாடி வைத்திருக்கிறான் நம் பாட்டன்.”
“ம்.”
“அன்றில் பறவை ஜோடிக்கு இடையே மலரொன்று நுழைந்தாலும் ஒரு கணப் பிரிவு தாளாது. அது போல் பிரிவில் இறப்பேன் என்கிறாள். நான் மட்டும் சளைத்தவளா?”
“எனில் என்னையும் அப்படி இறக்கச் சொல்கிறாயா தேவி? உயிரை விடுவது தான் காதலின் அளவுகோலா? அப்படிச் செய்தால் தான் என் காதல் நிரூபணம் ஆகுமா?”
“ஐயோ…!”
அலறியபடி அவன் வாயைப் பொத்தினாள் கொற்றவை. கண்கள் நீரை உதிர்த்தன.
“அப்படி இல்லை. உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள். நெஞ்சு வெடிக்கிறது.”
“எனில் நான் சொல்வதைக் கேள். ஒருவேளை நீ சோழர் படையால் இங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டால், உன் உடலை அவர்கள் சேதாரம் செய்தாலும் கூட நீ ஒருபோதும் சாவைத் தேடக்கூடாது. நான் உன்னை மீட்டுச் செல்ல வருவேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எங்கே இருந்தாலும் வருவேன். நீ காத்திரு.”
“நீங்களா? ஆனால் நீங்கள் போர் வீரர் அல்லவே? அப்பாவிக் கணக்காளர் தானே?”
“ஆனால் நான் காதலன். ஒரு போர் வீரனாக மாறினால் தான் உன்னை வந்து மீட்க முடியும் என்றால் அதுவாக ஆவேன். அரசனாக ஆக வேண்டுமெனில் அதுவாகவும்.”
“…”
“ஆம், தேவி. நானே ராமன், நானே அனுமன், நானே வருவேன், நானே மீட்பேன்.”
அவள் ருத்ரனை அணைத்துக் கொண்டாள். அவள் வெம்மை அவனைத் தொற்றியது.
அன்றைய புணர்ச்சியில் இருவரும் மலர் நுழைய அனுமதியாத அன்றில் பறவைகள் ஆகிப் போயினர். அந்தக்கலவி முழுக்க ஓர் அச்சம் இருந்தது. ஒருவித நிலையாமை ஒட்டிக் கொண்டிருந்தது. கொஞ்சம் குற்றவுணர்வும் பிசுபிசுத்தது. நீண்ட நெடியதொரு சம்போகத்துக்குப் பின்பு பூத்த உச்சத்தினூடே கொற்றவையின் விழியோரம் வழிந்த நீரை முத்தமிட்டான் ருத்ரன். அது தான் கடைசிப் புணர்ச்சியோ என அக்கணத்தில் அவனுக்கு ஓர் எண்ணமெழுந்தது. அதை மறைக்கத் தன் முகத்தைக் கொற்றவையின் கூந்தலில் புதைத்தான். அவள் குழலின் சுகந்தம் அவன் நாசியிலேறி மண்டையைத் தாக்கியது. அது மாரிக்காலத்தில் வைகைப் படுகையில் கிட்டும் வினோதத் தாவரம் ஒன்றைக் கொண்டு கொற்றவையே தயாரித்த பிரத்யேகத் தைலம். அரசிக்குக் கூட இந்நாள் வரையிலும் அவள் அதைச் செய்து கொடுத்ததில்லை. தந்திருந்தால் பெரும் பரிசுகள் கிட்டும் என்பதை அறிவாள். ஆனால் அது அவளுக்கு மட்டுமே. ருத்ரனின் சுவாசக் குழல்களுக்கு மட்டுமே. அதை மற்ற எவருக்கும் பங்கிடத் தயாரில்லை.
அவர்கள் இன்பத்தின் உச்சத்துக்கு மௌன சாட்சியாய்ப் பௌர்ணமி ஜ்வலித்தது.
மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டுமல்ல, படைத்தளபதி ருத்ரனுக்கும் அது பதினோராண்டுக் காத்திருப்பு. முழுதாய் நூற்று முப்பத்திரண்டு பௌர்ணமிகள் கொற்றவையின் வெம்மை இல்லாமல் தான் கழிந்திருக்கிறது. மீண்டும் அவளைக் காணப் போகும் எதிர்பார்ப்பு ருத்ரனுக்கு இனம்புரியாத ஓர் உணர்வை மேனியெங்கும் பரவச் செய்தது. அதை மகிழ்ச்சி என்றும் சொல்ல முடியவில்லை, துக்கம் என்றும் அடையாளப்படுத்த இயலாது. ஆனால் ஒருவித பரபரப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
மதுரை மாநகரிலிருந்து அன்றைய விடியலில் புறப்பட்டது. புரவிகளும் யானைகளும் தேர்களும் காலாட்படையும் என முழுப் போருக்குரிய முஸ்தீபுகளுடன் பாண்டிய சேனையின் தஞ்சை நோக்கிய பயணம். அது உண்மையில் பாண்டிய மன்னனுக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சனை தான். ஆனால் பாண்டிய தேசத்தைச் சுதந்திர பூமியாக்க அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. துணிந்து இறங்கி இருந்தான்.
இரவு பொன்னமராவதியில் தங்கிச் செல்லலாம் என்பது சுந்தர பாண்டியன் யோசனை தான். எப்படியும் இந்நேரம் கிழட்டு குலோத்துங்கனுக்கு சோழ ஒற்றர் மூலம் செய்தி போயிருக்கும். அவனுக்கு நாளைய பகற்பொழுது அவகாசம் இருக்கிறது படைகளைத் தயார் செய்வதற்கு. ஆனால் அது போதாது என்பது பாண்டியனுக்கு நன்கு தெரியும்.
இத்தனை ஆண்டு வெஞ்சினமும், இரண்டு நாழிகைத் தயாரிப்பும் ஒன்றா? அடிமைத் தளையிலிருந்து மீளுகிற வேட்கையும், அவசரத் தற்காப்பும் ஒரே மாதிரியானதா?
தன்மானம் இழந்த வலியும் அதனால் காத்திருக்கும் பகையும் வேறு விதமானது. அதை எதிர்கொள்ள வெறும் சேனை பலம் போதாது. அடிபட்ட புலிக்கிணை களிறு கூடக் கிடையாது. இதெல்லாம் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கும் தெரியும்.
மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான் என்ற தகவல் கண்ணகி வைத்த நெருப்பு போல் மதுரை நகரெங்கும் துரிதமாய்ப் பரவியது.
“கொற்றவை, இன்று நீ அந்தப்புரத்துக்குப் பணிக்குச் செல்ல வேண்டாம். விடுப்பெடு.”
“அரண்மனை அந்தப்புரத்தை விடவா இங்கு நம் இல்லத்தில் மேலதிகப் பாதுகாப்பு என நினைக்கிறீர்கள்? பேரரரசிக்கு ஆனது எனக்கும். நான் அங்கிருப்பதே நல்லது.”
“அதிக பாதுக்கப்பானதே அதிகம் தாக்கப்படும். அதனால் அங்கே போக வேண்டாம்.”
“ம்”
“ஆம் தேவி. நானும் இன்று அரண்மனை செல்லவில்லை. வீட்டிலேயே இருப்போம்.”
“ம்”
“வீட்டின் கதவை வெளியே பூட்டி விட்டு பின்புறக் கதவின் வழியே வீட்டுக்குள் வந்து விடுகிறேன். விளக்கெல்லாம் அணைத்து விட்டு ஊசி விழும் சப்தம் கூட இல்லாமல் உள்ளே இருப்போம். சோழர் படை நகரை கபளீகரம் செய்யத் துவங்கினாலும் பூட்டிய வீட்டைச் சந்தேகிக்க மாட்டார்கள். போர் எல்லாம் ஓய்ந்த பின் வெளியே வருவோம்.”
கொற்றவை அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் காலை உணவைச் சமைக்கத் துவங்கினாள். அவள் மனம் மிகுந்த சஞ்சலத்தில் இருந்தது. பயம் பீடித்திருந்தது.
ருத்ரன் தன் கூடாரத்துக்குத் திரும்பி சணலும் கம்பளியும் அடர்ந்திருந்த விரிப்பைத் தரையில் பரப்பி கண்கள் மூடிப் படுத்துக் கொண்டான். நித்திரை அவன் அழைப்புக்கு இணங்க மறுத்தது. இந்தப் போரைக் குறித்து யோசித்தான். அவனுக்கு அதன் வெற்றி தோல்வி குறித்தெல்லாம் உண்மையில் எந்த அக்கறையும் இல்லை. போர் அவனுக்கு கொற்றவையை அடையும் ஒரு பாலம் மட்டுமே. அதன் பொருட்டு விசுவாசமாகப் போரிடுவான். இது வெளியே தெரிந்தால் அவன் தன் பதவியில் இருக்க முடியாது.
ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மரணித்த பின்னர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணை ஏறிய முதல் நாள் அறிவித்த முதல் ஆணை சோழ தேசத்தின் மீது போர் தொடுப்பது. சொல்லப் போனால் புத்திர பாக்யம் இல்லாத குலசேகரன் தன் இளவல் சுந்தர பாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தாலும் ஆட்சிக்கு வர விடாமல் தாமதம் செய்ததற்கு சுந்தர பாண்டியனின் பழி தீர்க்கும் வேட்கை தான் காரணம். அது பாண்டிய நாட்டுக்கு மோசமான அழிவை ஏற்படுத்தும் எனக் குலசேகரன் அஞ்சினான்.
ஆம், இப்போது பாண்டிய நாடு சோழ தேசத்துக்குக் கப்பம் கட்டி வருகிறது தான். ஆனால் அது போக வேறு எந்தத் தொந்தரவும் கிடையாது. சோழ ஒற்றர்கள் கூட அவ்வளவாய் இந்தப் பக்கம் வருவதில்லை. ராஜ்ஜியம் இயல்பாகவே நடக்கிறது.
பதினோரு ஆண்டுகள் முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் படையெடுத்து வந்த போது மதுரையைத் துவம்சம் செய்தன அவனது சேனைகள். பாண்டிய தேசத்தின் பிரதானத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். கணக்கிலடங்காத அந்தப்புரப் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். செல்வங்கள் சூறையாடப்பட்டன. மாட மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. மாநகர் மரண ஓலங்களாலும் ஒப்பாரிகளாலும் நிரம்பி வழிந்தது. அனைத்திற்கும் மேல் மதுரை முடிசூட்டு மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டது.
அத்தீயின் மிச்சமிருந்த கதிர்கள் சுந்தர பாண்டியனின் நெஞ்சிலும் பற்றிக்கொண்டது.
சோழர் படையினர் பூட்டியிருந்த ருத்ரன் வீட்டின் கதவை உடைத்து நுழைந்தார்கள்.
எல்லோருக்கும் முன்பாய் மிகு எடை கொண்ட ஒரு மனிதர். அவர் ஒரு தளபதியாக இருக்க வேண்டும் என்பது அவரது உடுப்புகளிலிருந்தே புலப்பட்டது. நெற்றியில் வெட்டுக்காயம். முகமெங்கும் மேய்ந்திருந்த முரட்டு மீசை. வெறி மிகுந்த கண்கள்.
அவர் தன் கரத்தில் பற்றியிருந்த வாளில் புதுக் குருதி சொட்டிக் கொண்டிருந்தது.
“இதென்ன வெளியே வீட்டைப் பூட்டிக் கொண்டு சிறுபிள்ளைச் சொப்பு விளையாட்டு!”
“…”
“ஆனால் புகைப்போக்கி இல்லாத வீட்டில் அல்லவா இதை ஆட வேண்டும். அல்லது சாப்பிடாமல் பட்டினி கிடக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.”
“ஐயா, எங்களை விட்டு விடுங்கள். எங்கள் பணம், நகையை எடுத்துக் கொள்ளுங்கள்.”
ருத்ரன் தன் முன் மண்டியிட்டுக் கெஞ்சியதைக் கண்டு அத்தளபதி உரக்கச் சிரித்தார்.
“முட்டாள்! இங்கிருப்பதிலேயே ஆகச் சிறந்த சொத்து இந்தப் பிரபஞ்சப் பேரழகி தான்.”
கொற்றவை அலறி வீட்டுக்குள் ஓடத் துவங்க ஒரே பாய்ச்சலில் அவளது கரம் பற்றி வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று புரவியில் ஏற்றினார் அத்தளபதி. அவர் உடன் வந்திருந்த வீரர்கள் ருத்ரனை மாறி மாறி அறைந்தார்கள். முகத்தில் ரத்தம் வழிந்தது.
அதைப் பொருட்படுத்தாமல் தளபதியின் புரவிக்குப் பின்னாலேயே ஆவேசமாய் ஓடி வந்த ருத்ரனின் விலாவில் சோழ வீரன் ஒருவன் எறிந்த குறுவாள் பாய்ந்து குருதி கொப்பளித்தது. தடுமாறிக் கீழே விழுந்தான். புரவியிலிருந்து சிரமப்பட்டுத் தலை திருப்பிப் பார்த்த கொற்றவை கதறி மூர்ச்சையுற்று தளபதியின் மார்பில் சரிந்தாள்.
ருத்ரன் தன் விலாவிலிருந்த தழும்பைத் தடவிக் கொண்டான். தன்னை மீண்டும் சந்திக்கும் போது கொற்றவை அத்தழும்பில் முத்தமிடுவாள் எனத் தோன்றியது.
ருத்ரன் சிரித்துக் கொண்டான். அந்த நினைப்பே சுகமாய் இருந்தது. இவ்வளவு ஆண்டுகளும் அவன் வேறொருத்தியைத் தீண்டினான் இல்லை. அதற்கு ஏராளச் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால் அவள் நினைவுகளையே நிதமிரவு புணர்ந்து கொண்டிருந்தான். இன்றைய பொழுதோடு அது எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி.
மரணப் படுக்கையில் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் இருந்த போது தன் தம்பி மாறவர்மன் சுந்தர பாண்டியனை அழைத்து சத்தியம் கேட்டான். அவன் அரியணை ஏறிய பிறகு சோழ தேசம் மீது வம்படியாய்ப் போரில் இறங்க மாட்டேன் என உறுதி தருமாறு. அது முடியாது என்றும் பதிலாகத் தான் அரியணை ஏறாமலேயே இருந்து விடுவேன் என்கிற உறுதியை வேண்டுமானால் தர முடியும் எனச் சொன்னான் சுந்தர பாண்டியன். தான் அரசனாக விரும்புவதே சோழனைப் பழி தீர்க்கத்தான் அஃதில்லை எனும் போது அந்த அதிகாரமும் பதவியும் தனக்கெதற்கு எனக் கேள்வி எழுப்பினான்.
குலசேகரனிடம் அதற்குப் பதில் இல்லை. ஒருபோதும் சுந்தர பாண்டியனைத் தவிர வேறொருவரை மன்னனாக்கவே முடியாது. அவனுக்கு இணையான வீரர்கள் அன்று பாண்டிய தேசத்தில் எவருமில்லை. போக, அவன் கல்வியிலும் சிறந்தவன். அவனை நிராகரிக்கக் காரணங்கள் இல்லை. நாட்டு மக்களே அப்படியொரு முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொல்லப் போனால் எப்போது குலசேகரன் மரிப்பான், சுந்தர பாண்டியன் அரியணை ஏறுவான் என ஒரு சாரார் உள்ளூர ஓர் ஆர்வத்துடன் தான் காத்திருக்கிறார்கள். வெளியில் பேசினால் ராஜதுரோகம் ஆகிவிடும் என அமைதி காக்கிறார்கள். சுந்தர பாண்டியனுக்கு இப்படியான குயுக்தி எண்ணங்கள் இல்லை என்றாலும் வேறொருவருக்கு முடி சூட எத்தனித்தால் உள்நாட்டுக் குழப்பங்கள் விளையும். அது நிலைமையை மேலும் மோசமாக்கும். இதற்கு மாற்றுவழியேதும் தென்படவும் இல்லை. மன சஞ்சலத்தோட செத்துப் போனான் குலசேகர பாண்டியன்.
தீக்கிரையான முடிசூட்டு மண்டபத்தில் கிரீடம் சூடிக் கொண்டான் சுந்தர பாண்டியன்.
பாண்டிய நாடு சோழ நாட்டுக்குத் திறை செலுத்தும் அடிமை ஆட்சியாக மாறியது.
விலாவில் சொருகிய வாள் நான்கு நெல் தள்ளிக் குத்தியிருந்தால் குடலைக் கிழித்து, ரத்தப் போக்கை அதிகரித்து அவனது உயிரைக் குடித்திருக்கும் என வயிற்றில் பச்சிலைச்சாறு வைத்துக் கட்டிக் கொண்டே சொன்னார் அரண்மனை வைத்தியர்.
தான் உயிர் பிழைத்திருக்கக் காரணம் உண்டே என எண்ணிக் கொண்டான் ருத்ரன்.
கணக்காளர் பணியை விடுத்து மிகுந்த பிரயாசைக்குப் பின் ஒரு சாதாரணப் போர் வீரனாய் வாழ்வைப் புணரமைப்பு செய்து கொண்டான் ருத்ரன். அது அவன் முன்பு வாங்கிய ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு தான். ராணுவத்துக்கு பணம் நிறையச் செலவளிக்கும் நிலையும் மனமும் குலசேகர பாண்டியனுக்கு இல்லை. சொல்லப் போனால் அரசரின் இளவலும் தலைமைத் தளபதியுமான சுந்தர பாண்டியனின் பிடிவாதத்தில் தான் படைக்குத் தொடர்ந்து ஆளெடுக்கும் வேலை நடந்து வந்தது.
ருத்ரன் படை வீரர் தேர்வுக்குச் சென்ற போது சந்தேகத்துடன் விசாரித்தார்கள் -
“முட்டாளா நீ? நல்ல வேலையை விட்டு ஏன் படையில் குறைந்த சம்பளத்துக்குச் சேர நினைக்கிறாய்? அதுவும் ஆபத்தும் மன அழுத்தமும் நிறைந்ததொரு சேவை, மரியாதை குறைந்த பணி. மாறாக கணக்காளராகத் தொடர்ந்தால் ஒரு நாள் ஏதேனும் ஒரு அமைச்சருக்கு ஆலோசகராகக் கூட உயர்ந்து விடலாம் என்பதை அறிவாயா நீ?”
“நன்கறிவேன். சோழர் படை என் மனைவியைக் கவர்ந்து சென்று விட்டார்கள். நான் அதற்குப் பழி தீர்க்க வேண்டும். என்றேனும் நாம் சோழர்கள் மீது படையெடுப்போம் என நம்புகிறேன். அப்போது நான் போர்க்களத்தில் முன்வரிசையிலிருக்க வேண்டும்.”
உண்மையில் அவனுக்கு உள்ளே கனன்று கொண்டிருந்த இச்சை பழிவாங்கல் அல்ல; கொற்றவையை மீட்டழைத்து வருவது தான். அதை இவ்வாறு புனைந்து சொன்னான்.
மேற்கேள்வி ஏதும் கேட்காமல் அவனை அடுத்த கட்டத் தேர்விற்கு நகர்த்தினார்கள். வலிமையும் வளையும் திராணியும் தேவைப்பட்ட தேர்வுகளில் தோற்றுத் தோற்றுத் தேறினான். புத்திகூர்மை சம்மந்தப்பட்ட இடங்களில் பெரிய சிக்கல் இருக்கவில்லை.
இறுதியில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான் ருத்ரன். கூர்மதி மற்றும் துரிதமாய் எதையும் கற்றுக்கொள்ளும் திறன் காரணமாய் அதிவேகமாய்ப் பதவிகளில் ஏறினான். பத்தாண்டுகளில் படைத் தளபதி எனும் இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டான். இன்று பாண்டிய நாட்டின் புரவிப் படையின் ஐந்து பிரதானத் தளபதிகளுள் ஒருவன் ருத்ரன்.
மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணையேறிய சமயம் மூன்றாம் குலோத்துங்க சோழன் வயோதிகம் எட்டி இருந்தான். அவனது மகன் மூன்றாம் ராஜராஜ சோழன் மன்னனாக முடி சூட அத்தனை ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. அவனது நாமத்தில் ஒட்டிக் கொண்டிருந்த அசல் ராஜராஜ சோழன் அருண்மொழி வர்மன் அளவுக்கோ அவனது தந்தை மூன்றாம் குலோத்துங்கன் அளவுக்கோ கூட வீரமோ, மதியூகமோ, சமத்காரமோ கொண்டவன் அல்லன் என்பதாகவே சுந்தர பாண்டியன் கேள்விப்பட்டிருந்தான். அது அவனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருந்தது.
பின்னிரவில் உறங்கப் போன படை வீரர்கள் அனைவரும் அவசரமாக அதிகாலையில் துயிலெழுந்து தயாரானார்கள். நீராடி வந்து நிதானமாகப் போர்க்கோலம் பூண்டான் ருத்ரன். சுந்தர பாண்டியன் பொன்னமராவதியில் இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டிய ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்துக்குத் தன் படைகளுடன் சென்று வழிபட்டான்.
தஞ்சையை வென்று முடி சூட்டினால் அங்கிருந்து நேராய் வேதங்களில் பாண்டித்யம் பெற்ற பிராமணர்கள் வாழும் புலியூர் என்றும் சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் புண்ணிய நகரில் சிவகாம சுந்தரி அம்மன் சகிதம் வீற்றிருக்கும் ஆனந்தத் தாண்டவக் கோல நடராசப் பெருமானின் பாதங்களில் வணங்குவதாக வேண்டிக் கொண்டான்.
அங்கே வீரர்களை அழைத்து, கொடி மரத்தின் முன் வைத்து வீரவுரை நிகழ்த்தினான்.
“சோழர்களிடம் பாண்டியர்கள் பட்ட அவமதிப்பைத்துடைத்தெறிய நமக்குக் கிட்டியுள்ள பொன்னான வாய்ப்பு இது. உயிர் தந்தேனும் நமது நாட்டு மானம் மீட்போம். ஆனால் ஒவ்வொருவர் உயிரும் முக்கியம். நம் தரப்பில் சேதமின்றி வெற்றியை எட்டுவோம்.”
கண்ணகி வடிவமான நாச்சியம்மன் ஆலயத்தில் சூல் பலியிட்டுப் பூசை நடத்தினான்.
அர்ஜுனன் கொண்ட குறிக்குள் அடைபட்ட கிளிக் கண்கள் போல், சுயம் மறந்து தவம் செய்யும் விஸ்வாமித்திர முனிபோல் ருத்ரன் இலக்கெல்லாம் ஒன்றாகவே இருந்தது.
கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…!
பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட பாண்டிய சேனை தஞ்சை மாநகரில் கால் பதித்தது.
ஐந்தாறு ஆண்டுகள் முன் ருத்ரனின் நெருங்கிய நண்பனும், அவன் வாழ்க்கையை முழுக்க அறிந்தவனுமான கந்தன் மதுக் கோப்பைச் சிணுங்கல்களினூடே கேட்டான் –
“கொற்றவை இன்னும் உயிரோடு இருப்பதாக நீ எப்படி நம்புகிறாய்? அவள் அன்று கடத்தப்பட்ட போதே பாண்டிய எல்லை தாண்டும் முன்பே கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது அங்கு போய்ச் சேர்ந்த பின். அல்லது தற்கொலை கூடச் செய்திருக்கலாம். அப்போதே இல்லை என்றாலும் பின் எப்போதேனும். ஏனெனில் அவள் உன் மீது கொண்டிருந்த காதலை அறிவேன். சற்று உணர்ச்சிவசப்படாமல் யோசி, ருத்ரா.”
“என்னிடம் இதற்கு எந்த தர்க்கப்பூர்வ பதிலும் இல்லை கந்தா. ஆனால் என் மனம் அப்படித்தான் சொல்கிறது. கொற்றவை உயிருடன் இருக்கிறாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என் வாழ்க்கையைச் செலுத்துவது அந்த நம்பிக்கை மட்டுமே.”
“உனக்கு இன்னும் வயதிருக்கிறது ருத்ரா. ஏன் இதன் பின்னால் ஓடுகிறாய்? இன்று நீ இருக்கும் நிலைக்கு கண்ணசைத்தால் நல்ல குடும்பப் பேரழகிகள் வரிசை கட்டுவர்.”
“ஆனால் அவர்களில் எவரும் என்னுடைய கொற்றவை இல்லையே, தோழா!”
“என
“ருத்ரா…”
அவளது செந்தேகத்தில் சிதறிக் கிடந்த ருத்ரன் சிரமுயர்த்தி அவள் முகம் பார்த்தான்.
“குலப்பெண்டிர் புருஷனைப் பெயர் சொல்லி அழைப்பதிங்கு வழக்கமில்லை, தேவி.”
“கட்டிலில் கட்டுப்பாடுகள் செல்லாது. விளக்கணைத்தபின் விதிகளுக்கென்ன வேலை?”
ருத்ரனின் பின்னந்தலை மயிர் பற்றியிழுத்து அவன் வாயைக் கவ்விக் கொண்டாள்.
முத்தம் தீர்ந்து களைத்த போது ருத்ரன் அவளது பின்னங்கழுத்தின் கூந்தலில் முகம் புதைத்தான். அடர்ந்து செழித்த மயிர்க்காட்டிலிருந்து மனோரஞ்சித மணம் எழுந்தது.
மூச்சை நன்றாக இழுத்து தன் நெஞ்சுக்கூடு முழுக்க அந்த நறுமணத்தை நிரப்பிக் கொண்டு அவள் காது மடல்களை மெல்லக் கடித்தபடியே கிசுகிசுத்தான் ருத்ரன்.
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.”
“ஓஹோ! நீங்களும் பல மலரை ருசி கண்ட தும்பி தானோ?”
“இந்தக் குறிஞ்சிப் பூவை அளந்தவனுக்கு மற்றதெல்லாம் நெருஞ்சியல்லவா!”
தேனில் நீந்தும் வண்டின் கிறக்கத்துடன் கொற்றவை புன்னகைத்தாள். அக்கணத்தில் உலகமே பேரழகாகத் தோன்றியது ருத்ரனுக்கு. இந்த உலகில் மிக மகிழ்ச்சிகரமான மனிதர்கள் தாங்கள் என்றும். மேலே ஒரு விண்மீன் பளபளத்து அதை ஆமோதித்தது.

பற்குறி பதிந்த உதட்டுக்கடி வலி தலைக்கேற சட்டென நினைவு மீண்டான் ருத்ரன். உண்மையில் அவன் சுண்டுவிரலில் போட்டிருந்த சிறுகட்டு தான் லேசாய் எரிந்தது.
ராஜபாட்டையைக் கடக்கும் நத்தைபோல் யாமம் ஊரின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. காற்று மரங்களில் புகுந்து இலைகளுடன் புணர்ந்து சலசலத்தது. அது சோழ நாட்டின் பகுதி. பொன்னமராவதி என்பது அதன் பெயர். அந்நிலத்தின் கீழ் பல போர்க்கதைகள் தகித்திருந்தன. ஆனால் அவ்விடம் நீரில் அமிழ்த்தியது போல் சில்லிட்டுக் கிடந்தது.
கூதிர் காலத்தில் போருக்குப் புறப்படும் அரச கட்டளை பிழையோ என யோசித்தான்.
சுற்றிப் பார்த்தான். படை வீரர்கள் பொறுக்கிய சுள்ளிகளைக் குவித்து நெருப்பேற்றிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆரவாரமாய்ப் பாண்டிய மன்னனின் வெற்றியைப் பறைசாற்றுமொரு நாட்டுப்பாடலை தாள ராகம் பற்றிய கவலையற்று இசைத்துக்கொண்டிருந்தனர். இடையே சிரித்தும் பேசியும் ஆடியும் என அவ்விடத்தில் உற்சாகம் மூண்டிருந்தது. ஆனால் அவர்களில் எவரின் நாவிலும் ஒரு துளி மதுவும் இறங்கியிருக்கவில்லை என்பதை ருத்ரன் அறிந்திருந்தான். அது யுத்த வெறி. ரத்த வெறி. வெற்றிக்கான வெறி. அவர்கள் மூட்டியிருந்த தீ ஜ்வாலைகளின் அசைவைப் போலவே ஒழுங்கற்று ஆனால் பற்றியெரியும் அடர்த்தியான வன்மத்துடன் இருந்தது அவர்களின் நடனமும். அதைக் கண்டரண்டு நிலவு காணாமலாகிக் கொண்டிருந்தது.
ருத்ரனுக்கும் குளிர் உடைகளை ஊடுருவி உள்ளே பாய்ந்தது. ஆனால் அந்நேரத்தில் அவன் அவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பவில்லை. இரண்டு காரணங்கள். அவன் அவர்களின் தளபதி. அவன் முன் அவர்கள் அமர்வது கூட மரபல்ல. அவன் அங்கே சென்றால் மரியாதை என்ற போர்வையில் அவர்கள் தம் இயல்பைப் புதைப்பார்கள். அவன் பொருட்டு சொல்லிலும், செயலிலும் பாசாங்கு நுழையும். கொண்டாட்டங்கள் குறையும். அதை அவன் கிஞ்சித்தும் விரும்பவில்லை. அவர்கள் தமது பிரியப்படி இன்று இருந்தால் தான் நாளை வேண்டிய மூர்க்கத்துடன் போரில் ஈடுபடுவார்கள்.
போரில் எப்போதும் படைக்குப் பக்கமிருக்கும் தலைவன் மற்ற நேரங்களில் சற்றுத் தள்ளியிருப்பதே அவர்களுக்கு நல்லது, தலைவனுக்கும் நல்லது. இத்தனையாண்டு அனுபவத்தில் ருத்ரன் கற்றது இது. அவன் அங்கு போகாமைக்கு முதற்காரணம் இது.
இரண்டாம் காரணம் ருத்ரனுக்குக் கொஞ்சம் தனிமை வேண்டியிருந்தது. அவனும் அவன் சிந்தனைகளும் மட்டும் தொந்தரவற்றிருக்கும் தனிமை. நினைவுகளைத் தடை இன்றி அசைபோட உதவும் தனிமை. சுயவெறியேற்றிக் கொள்ள உதவும் தனிமை.
“நிஜமாகவா சொல்கிறீர்கள்?”
நெய் மணந்த ஊன்பொதிசோற்றை ருத்ரன் தட்டில் எடுத்து வைத்தபடி கேட்டாள்.
“ஆம், கொற்றவை.”
“குலோத்துங்கன் மதுரை மீது படையெடுத்து வருவதாகத் தான் கேள்விப்படுகிறேன். தகவல் உறுதியில்லை. ஆனால் அரண்மனையில் கிசுகிசுக்கிறார்கள். தளவாடங்கள் அவசரமாய்த் தயார்நிலைக்குப் போவதை நானே கண்கூடாகப் பார்க்கிறேன். போரை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான அத்தனை சமிக்ஞைகளும் இங்கு தென்படுகின்றன.”
“ஆச்சரியம். அந்தப்புரத்தில் அதற்கான அறிகுறிகளே இல்லையே!”
“உலகமே அழியவிருந்தாலும் அந்தப்புரம் தான் அதில் கடைசி.”
“ம். ஆனால் நான் பாண்டிமாதேவியின் பிரதான அலங்காரப் பொறுப்பு. தினமும் அவர் வனப்பும் வாசனையும் பூரணமாய் என் தீர்மானம். மஹாராணி அறிந்த யாவும் நான் அறிவேன். முந்தைய இரவு குலசேகர மன்னர் அவரைத் தீண்டினாரா என்பது வரை.”
“பட்டத்தரசிக்கே இவ்விஷயம் தெரிந்திருந்தால் தானே!”
“ஓ!”
“ஆம். மிகத்தாமதமாகவே நம் ஒற்றர்களுக்கு செய்தி தெரிய வந்திருக்கிறது போலும்.”
“ஆக, அந்தப்புரக்காரிகளை விட அரசுக் கணக்காளருக்கு அதிகம் தகவல் தெரிகிறது.”
“எனக்கு மட்டும் என்ன தெரியும்! எல்லாம் நம் ஆயுதக் கிடங்கு கந்தன் சொன்னது.”
“ஓ!”
“தவிர, அரசியல், ராஜாங்கம் என்பதெல்லாம் ஆண்களுக்கானது, தேவி.”
“ஆம், பெண்கள் எப்போதும் அதில் பகடைக் காய்கள் தாம்.”
“நிஜம் தான். சொல்லப்போனால் சரியும் கூடத் தான். அது ஒரு சொகுசு அல்லவா!”
“ம். ஏன் நம் மீது போர் தொடுக்கிறார்கள்?”
“போர்கள் முதலில் நடக்கும். பிறகு தான் காரணங்கள் கண்டுபிடித்து எழுதுவார்கள்.”
“ம். எப்போது சோழப் படை நம் நகரில் நுழையும்?”
“அனேகமாய் நாளை காலை என்கிறார்கள். அதிகபட்சம் நண்பகல்.”
மறுநாள் அமாவாஸ்யை. அதைத் தான் தாக்குதலுக்குரிய நாளாகத் தேர்ந்திருந்தான் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன். ராஜகுருவின் ஆலோசனை அது.
சுந்தர பாண்டியன் முடிசூடிக் கொள்கையில் செய்த சபதம் நாடெங்கும் பிரசித்தம்.
“இந்தப் பாண்டிய நாடு கொண்ட அவமானத்திற்குப் பதிலீடாகச் சோழ நாட்டின் மீது படையெடுத்து அதை வீழ்த்தியே தீருவேன். இன்றிலிருந்து ஆறு திங்களுக்குள் இதை நிறைவேற்றி சோழ கிரீடம் சூடுவேன். அப்படி ஒருவேளை செய்து முடிக்காவிடில் காளிக்கு என்னை நவகண்டம் தருவேன். இது மீன்கொடி பறக்க விட்ட என் பாண்டியமுன்னோர்கள் அத்தனை பேர் மீதும் ஆணை. என் தமையன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மீது ஆணை. பாண்டிய ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த மன்னன் குலசேகரப் பாண்டியன் மீது ஆணை. பாண்டவர்களுக்குத் தோள் கொடுத்து குருஷேத்ர யுத்தம் கண்ட மன்னன் மலையத்வஜ பாண்டியன் மீது ஆணை. அவனது புத்திரியும், மதுரை திருக்கோயிலில் உறைந்திருப்பவளுமான அரசி அன்னை மீனாக்ஷியின் மீது ஆணை.”
மதுரை மாநகர் முழுக்க அச்சபதம் இளைஞர்கள் மத்தியில் பாவனை செய்யப்பட்டது. அப்படி இருந்தும் அது சோழர் தேசத்தை எட்டாதிருந்தது ஆச்சரியம் தான். அவர்கள் பாண்டிய நாட்டை வென்றும் பெரிதாய் ஏதும் ஆதிக்கம் செலுத்தவில்லை. வரி வந்து சேர்ந்தால் போதும் என்று இருந்து விட்டார்கள். அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும் அளவுக்குக் கூடப்போகவில்லை. அது நம்பிக்கை அல்ல; அலட்சியம்.
மன்னரின் கூடாரத்தைத் திரும்பிப் பார்த்தான் ருத்ரன். உச்சியில் பறந்த இரட்டைக் கயல் கொடி அதை எளிதில் அடையாளங் காண உதவியது. அப்படிச் சுலபமாய்ப் பிரித்தறிய முடிவது பாதுகாப்பானதல்ல என்கிற முணுமுணுப்புக்கள் படையினர் மத்தியில் இருக்கத்தான் செய்தது. கூடாரத்தில் விளக்கெரிந்தது. மன்னர் இன்னும் விழித்திருக்கிறார் என்று பொருள். இரண்டாம் ஜாமம் முடிய இன்னும் ஒரு நாழிகை தான் இருக்கும். அவர் உறங்கப் போக வேண்டிய நேரம். வைகறையில் துயிலெழ வேண்டும். அனேகமாய் நாளை உச்சிவெயில் வேளையில் யுத்தம் துவங்கி இருக்கும்.
மஞ்சத்தில் துயில வேண்டிய சுந்தர பாண்டியன் இங்கே கொசுக் கடியில் புரண்டிருக்க ஒரே காரணம் தான். மானம். அதன் பொருட்டு அவன் மீது எப்போதுமே ருத்ரனுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மானம் என்பது ஒரு கற்பிதம் தானே என்றும் தோன்றியது.
கொற்றவையும் ருத்ரனும் பரஸ்பரம் கண் பார்த்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தனர். இருவரின் கரங்களும் ஒருவர் மீது ஒருவர் படர்ந்திருந்தன. ஒருவர் பேச மற்றவர் காத்திருந்தது இருவருக்குமே புரிந்தது. இறுக்கம் அவர்களிடையே விரவிக் கிடந்தது.
ஈராண்டு மண வாழ்வில் அது புதிது. இறுதியில் கொற்றவையே மௌனமுடைத்தாள்.
“போர் குறித்து அஞ்சுகிறீர்களா?”
“ம்.”
“நீங்கள் கவலைப்படாதீர்கள். நாடு நிற்கும். எத்தனையோ போர்கள் கண்ட மண் இது.”
“அதில்லை…”
“நம் மன்னரின் வீரம் குறித்து உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?”
“ம். இல்லை. அவர் திறமையான நிர்வாகி மட்டுமே. போருக்குரியவர் அல்லர். சாது.”
“அதே தான்.”
“ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது? நாம் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? பாண்டிய நாடு அடிமையானால் ஆகட்டும். எல்லோருக்கும் ஆனது தானே நமக்கும்!”
“என் கவலை நாட்டைப் பற்றியதல்ல…”
“சொத்துக்களை இழக்க நேரிடும் என்பது பற்றியா?”
“அதுவும் இல்லை. அதை மீண்டும் சம்பாதிக்கும் சாமர்த்தியம் உண்டு எனக்கு.”
“பின் என்ன தான் மனக்கிலேசம் உங்களுக்கு?”
“தேவி, போர் வெறியில் மதுரையில் காலடி எடுத்து வைக்கும் சோழர்களின் நோக்கம் நாடும் நிலமும் பொன்னும் பொருளும் மட்டுமல்ல. பாண்டியதேசப் பெண்களும்தான்.”
“இதுதானா உங்கள் கவலை! அப்படி ஏதும் நடந்தால் உயிரை மாய்த்துக் கொள்வேன்.”
ருத்ரன் பதறி அவள் வாயைப் பொத்தினான். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“இல்லை தேவி. அப்படிச் சொல்லாதே. அதெல்லாம் நடக்காது. ஆனாலும் பேச்சுக்குச் சொல்கிறேன். அம்மாதிரி ஏதும் நிகழ்ந்தாலும் அவர்களால் அதிகபட்சமாய்த் தீண்ட முடிந்தது உன் உடலை மட்டும் தான். உன் மனதில் இடம் பிடித்து விட முடியுமா? அதில் என்னைத் தவிர எவரும் நுழைய முடியுமா? பெண்ணுடல் மீதான அத்துமீறல் என்பது உடையில் நேரும் சிறுகறை போன்றதே. அதற்காக எவரேனும் உடையையே எரிப்பார்களா? அதனால் ஒருபோதும் நீ அந்த முடிவுக்கு வரக்கூடாது. இது என் மீது ஆணை. இதை உன்னிடம் அழுந்தச் சொல்லத் தான் இத்தனை நேரம் தயங்கினேன்.”
“இன்னொருவன் கைபட்ட பின் நான் ஒரு நடைபிணமாகி விடுவேனே. உங்களுக்கு மட்டுமே படைத்த உடலை எவனோ ஒருவன் கொத்தியுண்ணக் கண்டிருக்குமோ என் ஆன்மா? அக்கணமே மாயாதோ? மிஞ்சினாலும் அவன் எழும் நேரம் தெறிக்காதோ?”
“இல்லை. இல்லவே இல்லை. கூடாது. இன்னொன்றும் சொல்கிறேன். ஒருவேளை அவர்கள் உன்னைப் பலவந்தமாய் சோழ நாட்டுக்குத் தூக்கிச் செல்லவும் கூடும். நீ அப்போதும் கூட இம்மாதிரி மரணத்தைக் கைகொள்ளும் முடிவில் இறங்கக்கூடாது.”
“ஓ! எனில் தஞ்சை மாநகரில் நானொரு பரத்தையாகக் காலம் கழிக்க வேண்டுமா?”
கொற்றவையின் கேள்வியில் சினம் இருந்தது. அவள் கண்கள் சிவந்திருந்தன. அவை கழிவிரக்கத்தில் எந்நேரமும் உடைந்து கசிந்துருகத் தயாரான நிலையில் இருந்தன.
“கோபப்படாதே கொற்றவை. நான் மிகத் தீவிர யோசனைக்குப் பின்பே சொல்கிறேன்.”
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.”
“…”
“ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பாடி வைத்திருக்கிறான் நம் பாட்டன்.”
“ம்.”
“அன்றில் பறவை ஜோடிக்கு இடையே மலரொன்று நுழைந்தாலும் ஒரு கணப் பிரிவு தாளாது. அது போல் பிரிவில் இறப்பேன் என்கிறாள். நான் மட்டும் சளைத்தவளா?”
“எனில் என்னையும் அப்படி இறக்கச் சொல்கிறாயா தேவி? உயிரை விடுவது தான் காதலின் அளவுகோலா? அப்படிச் செய்தால் தான் என் காதல் நிரூபணம் ஆகுமா?”
“ஐயோ…!”
அலறியபடி அவன் வாயைப் பொத்தினாள் கொற்றவை. கண்கள் நீரை உதிர்த்தன.
“அப்படி இல்லை. உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள். நெஞ்சு வெடிக்கிறது.”
“எனில் நான் சொல்வதைக் கேள். ஒருவேளை நீ சோழர் படையால் இங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டால், உன் உடலை அவர்கள் சேதாரம் செய்தாலும் கூட நீ ஒருபோதும் சாவைத் தேடக்கூடாது. நான் உன்னை மீட்டுச் செல்ல வருவேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எங்கே இருந்தாலும் வருவேன். நீ காத்திரு.”
“நீங்களா? ஆனால் நீங்கள் போர் வீரர் அல்லவே? அப்பாவிக் கணக்காளர் தானே?”
“ஆனால் நான் காதலன். ஒரு போர் வீரனாக மாறினால் தான் உன்னை வந்து மீட்க முடியும் என்றால் அதுவாக ஆவேன். அரசனாக ஆக வேண்டுமெனில் அதுவாகவும்.”
“…”
“ஆம், தேவி. நானே ராமன், நானே அனுமன், நானே வருவேன், நானே மீட்பேன்.”
அவள் ருத்ரனை அணைத்துக் கொண்டாள். அவள் வெம்மை அவனைத் தொற்றியது.
அன்றைய புணர்ச்சியில் இருவரும் மலர் நுழைய அனுமதியாத அன்றில் பறவைகள் ஆகிப் போயினர். அந்தக்கலவி முழுக்க ஓர் அச்சம் இருந்தது. ஒருவித நிலையாமை ஒட்டிக் கொண்டிருந்தது. கொஞ்சம் குற்றவுணர்வும் பிசுபிசுத்தது. நீண்ட நெடியதொரு சம்போகத்துக்குப் பின்பு பூத்த உச்சத்தினூடே கொற்றவையின் விழியோரம் வழிந்த நீரை முத்தமிட்டான் ருத்ரன். அது தான் கடைசிப் புணர்ச்சியோ என அக்கணத்தில் அவனுக்கு ஓர் எண்ணமெழுந்தது. அதை மறைக்கத் தன் முகத்தைக் கொற்றவையின் கூந்தலில் புதைத்தான். அவள் குழலின் சுகந்தம் அவன் நாசியிலேறி மண்டையைத் தாக்கியது. அது மாரிக்காலத்தில் வைகைப் படுகையில் கிட்டும் வினோதத் தாவரம் ஒன்றைக் கொண்டு கொற்றவையே தயாரித்த பிரத்யேகத் தைலம். அரசிக்குக் கூட இந்நாள் வரையிலும் அவள் அதைச் செய்து கொடுத்ததில்லை. தந்திருந்தால் பெரும் பரிசுகள் கிட்டும் என்பதை அறிவாள். ஆனால் அது அவளுக்கு மட்டுமே. ருத்ரனின் சுவாசக் குழல்களுக்கு மட்டுமே. அதை மற்ற எவருக்கும் பங்கிடத் தயாரில்லை.
அவர்கள் இன்பத்தின் உச்சத்துக்கு மௌன சாட்சியாய்ப் பௌர்ணமி ஜ்வலித்தது.
மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டுமல்ல, படைத்தளபதி ருத்ரனுக்கும் அது பதினோராண்டுக் காத்திருப்பு. முழுதாய் நூற்று முப்பத்திரண்டு பௌர்ணமிகள் கொற்றவையின் வெம்மை இல்லாமல் தான் கழிந்திருக்கிறது. மீண்டும் அவளைக் காணப் போகும் எதிர்பார்ப்பு ருத்ரனுக்கு இனம்புரியாத ஓர் உணர்வை மேனியெங்கும் பரவச் செய்தது. அதை மகிழ்ச்சி என்றும் சொல்ல முடியவில்லை, துக்கம் என்றும் அடையாளப்படுத்த இயலாது. ஆனால் ஒருவித பரபரப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
மதுரை மாநகரிலிருந்து அன்றைய விடியலில் புறப்பட்டது. புரவிகளும் யானைகளும் தேர்களும் காலாட்படையும் என முழுப் போருக்குரிய முஸ்தீபுகளுடன் பாண்டிய சேனையின் தஞ்சை நோக்கிய பயணம். அது உண்மையில் பாண்டிய மன்னனுக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சனை தான். ஆனால் பாண்டிய தேசத்தைச் சுதந்திர பூமியாக்க அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. துணிந்து இறங்கி இருந்தான்.
இரவு பொன்னமராவதியில் தங்கிச் செல்லலாம் என்பது சுந்தர பாண்டியன் யோசனை தான். எப்படியும் இந்நேரம் கிழட்டு குலோத்துங்கனுக்கு சோழ ஒற்றர் மூலம் செய்தி போயிருக்கும். அவனுக்கு நாளைய பகற்பொழுது அவகாசம் இருக்கிறது படைகளைத் தயார் செய்வதற்கு. ஆனால் அது போதாது என்பது பாண்டியனுக்கு நன்கு தெரியும்.
இத்தனை ஆண்டு வெஞ்சினமும், இரண்டு நாழிகைத் தயாரிப்பும் ஒன்றா? அடிமைத் தளையிலிருந்து மீளுகிற வேட்கையும், அவசரத் தற்காப்பும் ஒரே மாதிரியானதா?
தன்மானம் இழந்த வலியும் அதனால் காத்திருக்கும் பகையும் வேறு விதமானது. அதை எதிர்கொள்ள வெறும் சேனை பலம் போதாது. அடிபட்ட புலிக்கிணை களிறு கூடக் கிடையாது. இதெல்லாம் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கும் தெரியும்.
மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருகிறான் என்ற தகவல் கண்ணகி வைத்த நெருப்பு போல் மதுரை நகரெங்கும் துரிதமாய்ப் பரவியது.
“கொற்றவை, இன்று நீ அந்தப்புரத்துக்குப் பணிக்குச் செல்ல வேண்டாம். விடுப்பெடு.”
“அரண்மனை அந்தப்புரத்தை விடவா இங்கு நம் இல்லத்தில் மேலதிகப் பாதுகாப்பு என நினைக்கிறீர்கள்? பேரரரசிக்கு ஆனது எனக்கும். நான் அங்கிருப்பதே நல்லது.”
“அதிக பாதுக்கப்பானதே அதிகம் தாக்கப்படும். அதனால் அங்கே போக வேண்டாம்.”
“ம்”
“ஆம் தேவி. நானும் இன்று அரண்மனை செல்லவில்லை. வீட்டிலேயே இருப்போம்.”
“ம்”
“வீட்டின் கதவை வெளியே பூட்டி விட்டு பின்புறக் கதவின் வழியே வீட்டுக்குள் வந்து விடுகிறேன். விளக்கெல்லாம் அணைத்து விட்டு ஊசி விழும் சப்தம் கூட இல்லாமல் உள்ளே இருப்போம். சோழர் படை நகரை கபளீகரம் செய்யத் துவங்கினாலும் பூட்டிய வீட்டைச் சந்தேகிக்க மாட்டார்கள். போர் எல்லாம் ஓய்ந்த பின் வெளியே வருவோம்.”
கொற்றவை அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் காலை உணவைச் சமைக்கத் துவங்கினாள். அவள் மனம் மிகுந்த சஞ்சலத்தில் இருந்தது. பயம் பீடித்திருந்தது.
ருத்ரன் தன் கூடாரத்துக்குத் திரும்பி சணலும் கம்பளியும் அடர்ந்திருந்த விரிப்பைத் தரையில் பரப்பி கண்கள் மூடிப் படுத்துக் கொண்டான். நித்திரை அவன் அழைப்புக்கு இணங்க மறுத்தது. இந்தப் போரைக் குறித்து யோசித்தான். அவனுக்கு அதன் வெற்றி தோல்வி குறித்தெல்லாம் உண்மையில் எந்த அக்கறையும் இல்லை. போர் அவனுக்கு கொற்றவையை அடையும் ஒரு பாலம் மட்டுமே. அதன் பொருட்டு விசுவாசமாகப் போரிடுவான். இது வெளியே தெரிந்தால் அவன் தன் பதவியில் இருக்க முடியாது.
ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் மரணித்த பின்னர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணை ஏறிய முதல் நாள் அறிவித்த முதல் ஆணை சோழ தேசத்தின் மீது போர் தொடுப்பது. சொல்லப் போனால் புத்திர பாக்யம் இல்லாத குலசேகரன் தன் இளவல் சுந்தர பாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தாலும் ஆட்சிக்கு வர விடாமல் தாமதம் செய்ததற்கு சுந்தர பாண்டியனின் பழி தீர்க்கும் வேட்கை தான் காரணம். அது பாண்டிய நாட்டுக்கு மோசமான அழிவை ஏற்படுத்தும் எனக் குலசேகரன் அஞ்சினான்.
ஆம், இப்போது பாண்டிய நாடு சோழ தேசத்துக்குக் கப்பம் கட்டி வருகிறது தான். ஆனால் அது போக வேறு எந்தத் தொந்தரவும் கிடையாது. சோழ ஒற்றர்கள் கூட அவ்வளவாய் இந்தப் பக்கம் வருவதில்லை. ராஜ்ஜியம் இயல்பாகவே நடக்கிறது.
பதினோரு ஆண்டுகள் முன் மூன்றாம் குலோத்துங்க சோழன் படையெடுத்து வந்த போது மதுரையைத் துவம்சம் செய்தன அவனது சேனைகள். பாண்டிய தேசத்தின் பிரதானத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். கணக்கிலடங்காத அந்தப்புரப் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். செல்வங்கள் சூறையாடப்பட்டன. மாட மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. மாநகர் மரண ஓலங்களாலும் ஒப்பாரிகளாலும் நிரம்பி வழிந்தது. அனைத்திற்கும் மேல் மதுரை முடிசூட்டு மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டது.
அத்தீயின் மிச்சமிருந்த கதிர்கள் சுந்தர பாண்டியனின் நெஞ்சிலும் பற்றிக்கொண்டது.
சோழர் படையினர் பூட்டியிருந்த ருத்ரன் வீட்டின் கதவை உடைத்து நுழைந்தார்கள்.
எல்லோருக்கும் முன்பாய் மிகு எடை கொண்ட ஒரு மனிதர். அவர் ஒரு தளபதியாக இருக்க வேண்டும் என்பது அவரது உடுப்புகளிலிருந்தே புலப்பட்டது. நெற்றியில் வெட்டுக்காயம். முகமெங்கும் மேய்ந்திருந்த முரட்டு மீசை. வெறி மிகுந்த கண்கள்.
அவர் தன் கரத்தில் பற்றியிருந்த வாளில் புதுக் குருதி சொட்டிக் கொண்டிருந்தது.
“இதென்ன வெளியே வீட்டைப் பூட்டிக் கொண்டு சிறுபிள்ளைச் சொப்பு விளையாட்டு!”
“…”
“ஆனால் புகைப்போக்கி இல்லாத வீட்டில் அல்லவா இதை ஆட வேண்டும். அல்லது சாப்பிடாமல் பட்டினி கிடக்கவாவது தெரிந்திருக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.”
“ஐயா, எங்களை விட்டு விடுங்கள். எங்கள் பணம், நகையை எடுத்துக் கொள்ளுங்கள்.”
ருத்ரன் தன் முன் மண்டியிட்டுக் கெஞ்சியதைக் கண்டு அத்தளபதி உரக்கச் சிரித்தார்.
“முட்டாள்! இங்கிருப்பதிலேயே ஆகச் சிறந்த சொத்து இந்தப் பிரபஞ்சப் பேரழகி தான்.”
கொற்றவை அலறி வீட்டுக்குள் ஓடத் துவங்க ஒரே பாய்ச்சலில் அவளது கரம் பற்றி வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று புரவியில் ஏற்றினார் அத்தளபதி. அவர் உடன் வந்திருந்த வீரர்கள் ருத்ரனை மாறி மாறி அறைந்தார்கள். முகத்தில் ரத்தம் வழிந்தது.
அதைப் பொருட்படுத்தாமல் தளபதியின் புரவிக்குப் பின்னாலேயே ஆவேசமாய் ஓடி வந்த ருத்ரனின் விலாவில் சோழ வீரன் ஒருவன் எறிந்த குறுவாள் பாய்ந்து குருதி கொப்பளித்தது. தடுமாறிக் கீழே விழுந்தான். புரவியிலிருந்து சிரமப்பட்டுத் தலை திருப்பிப் பார்த்த கொற்றவை கதறி மூர்ச்சையுற்று தளபதியின் மார்பில் சரிந்தாள்.
ருத்ரன் தன் விலாவிலிருந்த தழும்பைத் தடவிக் கொண்டான். தன்னை மீண்டும் சந்திக்கும் போது கொற்றவை அத்தழும்பில் முத்தமிடுவாள் எனத் தோன்றியது.
ருத்ரன் சிரித்துக் கொண்டான். அந்த நினைப்பே சுகமாய் இருந்தது. இவ்வளவு ஆண்டுகளும் அவன் வேறொருத்தியைத் தீண்டினான் இல்லை. அதற்கு ஏராளச் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால் அவள் நினைவுகளையே நிதமிரவு புணர்ந்து கொண்டிருந்தான். இன்றைய பொழுதோடு அது எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி.
மரணப் படுக்கையில் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் இருந்த போது தன் தம்பி மாறவர்மன் சுந்தர பாண்டியனை அழைத்து சத்தியம் கேட்டான். அவன் அரியணை ஏறிய பிறகு சோழ தேசம் மீது வம்படியாய்ப் போரில் இறங்க மாட்டேன் என உறுதி தருமாறு. அது முடியாது என்றும் பதிலாகத் தான் அரியணை ஏறாமலேயே இருந்து விடுவேன் என்கிற உறுதியை வேண்டுமானால் தர முடியும் எனச் சொன்னான் சுந்தர பாண்டியன். தான் அரசனாக விரும்புவதே சோழனைப் பழி தீர்க்கத்தான் அஃதில்லை எனும் போது அந்த அதிகாரமும் பதவியும் தனக்கெதற்கு எனக் கேள்வி எழுப்பினான்.
குலசேகரனிடம் அதற்குப் பதில் இல்லை. ஒருபோதும் சுந்தர பாண்டியனைத் தவிர வேறொருவரை மன்னனாக்கவே முடியாது. அவனுக்கு இணையான வீரர்கள் அன்று பாண்டிய தேசத்தில் எவருமில்லை. போக, அவன் கல்வியிலும் சிறந்தவன். அவனை நிராகரிக்கக் காரணங்கள் இல்லை. நாட்டு மக்களே அப்படியொரு முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொல்லப் போனால் எப்போது குலசேகரன் மரிப்பான், சுந்தர பாண்டியன் அரியணை ஏறுவான் என ஒரு சாரார் உள்ளூர ஓர் ஆர்வத்துடன் தான் காத்திருக்கிறார்கள். வெளியில் பேசினால் ராஜதுரோகம் ஆகிவிடும் என அமைதி காக்கிறார்கள். சுந்தர பாண்டியனுக்கு இப்படியான குயுக்தி எண்ணங்கள் இல்லை என்றாலும் வேறொருவருக்கு முடி சூட எத்தனித்தால் உள்நாட்டுக் குழப்பங்கள் விளையும். அது நிலைமையை மேலும் மோசமாக்கும். இதற்கு மாற்றுவழியேதும் தென்படவும் இல்லை. மன சஞ்சலத்தோட செத்துப் போனான் குலசேகர பாண்டியன்.
தீக்கிரையான முடிசூட்டு மண்டபத்தில் கிரீடம் சூடிக் கொண்டான் சுந்தர பாண்டியன்.
பாண்டிய நாடு சோழ நாட்டுக்குத் திறை செலுத்தும் அடிமை ஆட்சியாக மாறியது.
விலாவில் சொருகிய வாள் நான்கு நெல் தள்ளிக் குத்தியிருந்தால் குடலைக் கிழித்து, ரத்தப் போக்கை அதிகரித்து அவனது உயிரைக் குடித்திருக்கும் என வயிற்றில் பச்சிலைச்சாறு வைத்துக் கட்டிக் கொண்டே சொன்னார் அரண்மனை வைத்தியர்.
தான் உயிர் பிழைத்திருக்கக் காரணம் உண்டே என எண்ணிக் கொண்டான் ருத்ரன்.
கணக்காளர் பணியை விடுத்து மிகுந்த பிரயாசைக்குப் பின் ஒரு சாதாரணப் போர் வீரனாய் வாழ்வைப் புணரமைப்பு செய்து கொண்டான் ருத்ரன். அது அவன் முன்பு வாங்கிய ஊதியத்தில் நான்கில் ஒரு பங்கு தான். ராணுவத்துக்கு பணம் நிறையச் செலவளிக்கும் நிலையும் மனமும் குலசேகர பாண்டியனுக்கு இல்லை. சொல்லப் போனால் அரசரின் இளவலும் தலைமைத் தளபதியுமான சுந்தர பாண்டியனின் பிடிவாதத்தில் தான் படைக்குத் தொடர்ந்து ஆளெடுக்கும் வேலை நடந்து வந்தது.
ருத்ரன் படை வீரர் தேர்வுக்குச் சென்ற போது சந்தேகத்துடன் விசாரித்தார்கள் -
“முட்டாளா நீ? நல்ல வேலையை விட்டு ஏன் படையில் குறைந்த சம்பளத்துக்குச் சேர நினைக்கிறாய்? அதுவும் ஆபத்தும் மன அழுத்தமும் நிறைந்ததொரு சேவை, மரியாதை குறைந்த பணி. மாறாக கணக்காளராகத் தொடர்ந்தால் ஒரு நாள் ஏதேனும் ஒரு அமைச்சருக்கு ஆலோசகராகக் கூட உயர்ந்து விடலாம் என்பதை அறிவாயா நீ?”
“நன்கறிவேன். சோழர் படை என் மனைவியைக் கவர்ந்து சென்று விட்டார்கள். நான் அதற்குப் பழி தீர்க்க வேண்டும். என்றேனும் நாம் சோழர்கள் மீது படையெடுப்போம் என நம்புகிறேன். அப்போது நான் போர்க்களத்தில் முன்வரிசையிலிருக்க வேண்டும்.”
உண்மையில் அவனுக்கு உள்ளே கனன்று கொண்டிருந்த இச்சை பழிவாங்கல் அல்ல; கொற்றவையை மீட்டழைத்து வருவது தான். அதை இவ்வாறு புனைந்து சொன்னான்.
மேற்கேள்வி ஏதும் கேட்காமல் அவனை அடுத்த கட்டத் தேர்விற்கு நகர்த்தினார்கள். வலிமையும் வளையும் திராணியும் தேவைப்பட்ட தேர்வுகளில் தோற்றுத் தோற்றுத் தேறினான். புத்திகூர்மை சம்மந்தப்பட்ட இடங்களில் பெரிய சிக்கல் இருக்கவில்லை.
இறுதியில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான் ருத்ரன். கூர்மதி மற்றும் துரிதமாய் எதையும் கற்றுக்கொள்ளும் திறன் காரணமாய் அதிவேகமாய்ப் பதவிகளில் ஏறினான். பத்தாண்டுகளில் படைத் தளபதி எனும் இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டான். இன்று பாண்டிய நாட்டின் புரவிப் படையின் ஐந்து பிரதானத் தளபதிகளுள் ஒருவன் ருத்ரன்.
மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரியணையேறிய சமயம் மூன்றாம் குலோத்துங்க சோழன் வயோதிகம் எட்டி இருந்தான். அவனது மகன் மூன்றாம் ராஜராஜ சோழன் மன்னனாக முடி சூட அத்தனை ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. அவனது நாமத்தில் ஒட்டிக் கொண்டிருந்த அசல் ராஜராஜ சோழன் அருண்மொழி வர்மன் அளவுக்கோ அவனது தந்தை மூன்றாம் குலோத்துங்கன் அளவுக்கோ கூட வீரமோ, மதியூகமோ, சமத்காரமோ கொண்டவன் அல்லன் என்பதாகவே சுந்தர பாண்டியன் கேள்விப்பட்டிருந்தான். அது அவனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருந்தது.
பின்னிரவில் உறங்கப் போன படை வீரர்கள் அனைவரும் அவசரமாக அதிகாலையில் துயிலெழுந்து தயாரானார்கள். நீராடி வந்து நிதானமாகப் போர்க்கோலம் பூண்டான் ருத்ரன். சுந்தர பாண்டியன் பொன்னமராவதியில் இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டிய ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்துக்குத் தன் படைகளுடன் சென்று வழிபட்டான்.
தஞ்சையை வென்று முடி சூட்டினால் அங்கிருந்து நேராய் வேதங்களில் பாண்டித்யம் பெற்ற பிராமணர்கள் வாழும் புலியூர் என்றும் சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் புண்ணிய நகரில் சிவகாம சுந்தரி அம்மன் சகிதம் வீற்றிருக்கும் ஆனந்தத் தாண்டவக் கோல நடராசப் பெருமானின் பாதங்களில் வணங்குவதாக வேண்டிக் கொண்டான்.
அங்கே வீரர்களை அழைத்து, கொடி மரத்தின் முன் வைத்து வீரவுரை நிகழ்த்தினான்.
“சோழர்களிடம் பாண்டியர்கள் பட்ட அவமதிப்பைத்துடைத்தெறிய நமக்குக் கிட்டியுள்ள பொன்னான வாய்ப்பு இது. உயிர் தந்தேனும் நமது நாட்டு மானம் மீட்போம். ஆனால் ஒவ்வொருவர் உயிரும் முக்கியம். நம் தரப்பில் சேதமின்றி வெற்றியை எட்டுவோம்.”
கண்ணகி வடிவமான நாச்சியம்மன் ஆலயத்தில் சூல் பலியிட்டுப் பூசை நடத்தினான்.
அர்ஜுனன் கொண்ட குறிக்குள் அடைபட்ட கிளிக் கண்கள் போல், சுயம் மறந்து தவம் செய்யும் விஸ்வாமித்திர முனிபோல் ருத்ரன் இலக்கெல்லாம் ஒன்றாகவே இருந்தது.
கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…! கொற்றவை…!
பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட பாண்டிய சேனை தஞ்சை மாநகரில் கால் பதித்தது.
ஐந்தாறு ஆண்டுகள் முன் ருத்ரனின் நெருங்கிய நண்பனும், அவன் வாழ்க்கையை முழுக்க அறிந்தவனுமான கந்தன் மதுக் கோப்பைச் சிணுங்கல்களினூடே கேட்டான் –
“கொற்றவை இன்னும் உயிரோடு இருப்பதாக நீ எப்படி நம்புகிறாய்? அவள் அன்று கடத்தப்பட்ட போதே பாண்டிய எல்லை தாண்டும் முன்பே கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது அங்கு போய்ச் சேர்ந்த பின். அல்லது தற்கொலை கூடச் செய்திருக்கலாம். அப்போதே இல்லை என்றாலும் பின் எப்போதேனும். ஏனெனில் அவள் உன் மீது கொண்டிருந்த காதலை அறிவேன். சற்று உணர்ச்சிவசப்படாமல் யோசி, ருத்ரா.”
“என்னிடம் இதற்கு எந்த தர்க்கப்பூர்வ பதிலும் இல்லை கந்தா. ஆனால் என் மனம் அப்படித்தான் சொல்கிறது. கொற்றவை உயிருடன் இருக்கிறாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என் வாழ்க்கையைச் செலுத்துவது அந்த நம்பிக்கை மட்டுமே.”
“உனக்கு இன்னும் வயதிருக்கிறது ருத்ரா. ஏன் இதன் பின்னால் ஓடுகிறாய்? இன்று நீ இருக்கும் நிலைக்கு கண்ணசைத்தால் நல்ல குடும்பப் பேரழகிகள் வரிசை கட்டுவர்.”
“ஆனால் அவர்களில் எவரும் என்னுடைய கொற்றவை இல்லையே, தோழா!”
“என
Published on July 05, 2020 19:41
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
