இந்த ட்வீட் பாரதிய ஜனதாக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா என்பவருடையது என்பதை அறியும்போது மனதிற்கு வேதனை அளிக்கிறது.
கீழ்த்தரமான ஒருவன் முழுப்போதையில் உளறுவதைவிடவும் கீழ்த்தரமானதாக இருக்கிறது
இது இந்தியாவிற்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமிடையே இருக்கும் உறவை பாதிக்காதா?
இவர் எதார்த்தமாகப் பார்த்தால்கூட சக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூசுமே
இவர் இந்த ட்வீட்டை நீக்கி இருக்கக் கூடும்
ஆனாலும் நீங்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாண்பமை பிரதமர் அவர்களே
அல்லாது போனால் அவரது கீழ்மையான கருத்தோடு நீங்களும் ஒத்துப் போவதாக கொள்ளவேண்டி வரும்
Published on April 21, 2020 18:09