ஆனால் இவை ஏதொன்றிற்கும் ஆளற்றவர்களுக்கு....
நேற்று காலை பள்ளிக் கல்வித்துறையின் மேநாள் இயக்குனரும் தற்போதைய தமிழக அரசின் இணைச் செயலாளராகவும் (துறை நினைவிற்கு வரவில்லை) கார்மேகம் சார் அலைபேசினார்இன்று தோழர் மோகனா ( Mohana Somasundram ) அலை பேசினார்கார்மேகம் சார் தென் கொரியா குறித்து முக்கால் மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தார்அது குறித்து ஒரு கட்டுரையாகவே தந்து விடுவேன்மோகனா அமெரிக்கா குறித்து பேசிக் கொண்டிருந்தார்ஆனால் இருவரும்தென்கொரியா குறித்து பேசுவதற்கோ அமெரிக்கா குறித்து பேசுவதற்கோ என்னை அழைக்கவில்லைஒரே விஷயம் குறித்து பேசவே இருவரும் அழைத்ததுசுகர் இருக்காம்அதனால் கொரோவிற்கு என்னைப் பிடிக்குமாம்என்னைப் பிடித்தவர்களை நோக்கியே நான் பயணப்படுபவனாம்அதனால்வீட்டை விட்டு வெளியே வரக் கூடாதாம்காய்கறி வாங்கக்கூடஆறேழு வார்த்தைகள்தான்ஆனால் அவைநமக்காக இருக்கிறார்கள் என்பதை சொல்லினநாம் அநாதை அல்ல என்று சொல்லினஎதற்கு மறைத்துக் கொண்டுஅப்படி ஒரு உற்சாகம் வந்துவிட்டதுஉங்களுக்கும் இதுபோன்ற உற்சாகத்தை யாரேனும் தந்திருக்கக் கூடும்ஆனால் இவை ஏதொன்றிற்கும் ஆளற்றவர்களுக்கு.....நாம்தான்நாம்தான் தரவேண்டும் அதைவெளிபோக முடியாத உடம்புஆனால் என்னஅவர்களுக்காக சிந்திப்போம்அவர்களுக்காக எழுதுவோம்அவர்களுக்காக செயல்படுவோம்
Published on April 02, 2020 02:26
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

![இரா. எட்வின் [R.Edwin]](https://s.gr-assets.com/assets/nophoto/user/u_111x148-9394ebedbb3c6c218f64be9549657029.png)