அவர்கள் அங்கிருந்து நகரவே மாட்டார்கள்.


பிரியத்திற்குரிய திரு ராகுல்அவர்களுக்கு,வணக்கம்.
நடந்து முடிந்த தேர்தலில்பாஜகவின் கோட்டைக்குள்ளேயே புகுந்துஅந்தக் கட்சியின் கண்களில்விரலைவிட்டு விளையாண்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு இந்தஎளிய மனிதனின் வணக்கமும்வாழ்த்துக்களும்.
உங்களது கட்சியின் செய்தித்தொடர்பாளர் திருமதி குஷ்புஅவர்கள் சொன்னதுபோல் இந்தஅளவிற்கு மக்கள் பாஜகவைநிராகரித்திருப்பதற்கு நீங்கள் மட்டும்காரணம் இல்லை என்பதுஉண்மைதான். அதை நீங்களும் உணர்ந்தேஇருக்கிறீர்கள். ஆனால் பாஜகமீதான மக்களின் கோபத்தைமிகச் சரியாக ஒருங்கிணைத்துஒரு புள்ளியில் குவித்ததில்உங்கள் பங்கு மகத்தானது. அதை ஒருசாதனையாகக் கொண்டால் அதற்குரியதொண்ணூறு விழுக்காடு உங்களைத்தான்சேரும்.
அதே நேரம் செல்விமாயாவதி மற்றும் திருஅகிலேஷ் ஆகியோரோடு நீங்கள்ஒரு இணக்கத்தைக் கைக்கொண்டிருந்தால் பாஜக இத்தனை இடங்களையும்இவ்வளவு வாக்குகளையும் வாங்கியிருக்கமுடியாது. ஒருக்கால் அப்படி நடந்திருந்தால்அது வர இருக்கிற நாடாளுமன்றத்தேர்தலுக்கான உங்களுக்கான கூடுதலான பலமாகஇருந்திருக்கும்.
எந்தவிதமான கூச்ச நாச்சமும்இல்லாமல், மக்களை கேவலப்படுத்துகிற, பிரித்தாளுகிறமற்றும் நாசப்படுத்துகிற காரணகாரியங்களை பாஜக அரசுமிகுதியான ஆணவத்தோடு செயல்படுத்தத்தொடங்கி இருக்கிறது. இதன்மூலம்மக்களுக்கு எதிர்சக்திகள் தாங்கள்என்பதை அவர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக்காலகட்டத்தில் நீங்கள் பலப்படுவதுஎன்பது எளிய மக்களுக்குஒருவித நம்பிக்கையைத் தருகிறது. அதனால்தான் நீங்கள் இன்னும்பேரதிகமாய் பலப்பட வேண்டும்என்று விரும்புகிறோம்.
ஒன்றைச் சொல்ல வேண்டும்திரு ராகுல்,
பொதுவாக ஒவ்வொரு தேர்தல்நடந்து முடிந்த பின்பும்ஏதோ ஒரு கட்சி அல்லதுகூட்டணி வெற்றி பெற்றதாகசிலர் கொண்டாடுகிறார்கள். ஏதோஒரு கட்சி அல்லதுகூட்டணி தோற்றுப் போனதாய்சிலர் துவண்டு போகிறார்கள். பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
ஆனால், எந்தக் கட்சியும் வெற்றிபெறுவதும் இல்லை. எந்தக் கட்சியும்தோல்வியுறுவதும் இல்லை.
மக்கள் நம்பி ஒருகட்சியை அல்லது ஒருகூட்டணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலரைநிராகரிக்கிறார்கள். மக்கள் தேர்ந்தெடுத்தகட்சி அல்லது கூட்டணிஏதோ தாம் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இதில் வெற்றியும் தோல்வியும்மக்களுக்கானவை.
மக்களுக்கான வெற்றியையும் தோல்வியையும்கூட தமதென்று அரசியல் கட்சிகள்களவாடிக் கொள்வதாகத்தான் இதைக்கொள்ள வேண்டும்.
தேர்தல் வெற்றி தோல்விஎப்படி மக்களுடையதாகும்?
அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சிஅவர்களுக்கான ஒரு நல்ல ஆட்சியைத்தருமானால் அது அவர்களுக்கான வெற்றியாகும். அல்லாது போனால் அந்தத்தேர்தலில் மக்கள் தோற்றுப்போனார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.
பொதுவாக தேர்தலில் அதைச்செய்கிறோம் இதைச் செய்கிறோம்என்று கட்சிகள் மக்களிடம்வாக்குறுதிகளைக் கொடுப்பது எல்லோரும்அறிந்தது.
வாக்காளர்கள் செலுத்தும் ஒவ்வொருவாக்கும் ஒரு கோரிக்கை சீட்டாகும். வரும் ஐந்து ஆண்டுகளுக்குஎங்கள் குழந்தைகளுக்கான நல்லகல்வியை, ஆரோக்கியமான வாழ்வை, வேலைக்கானஉத்தரவாதத்தை, சமத்துவத்தை, எங்கள்மொழிக்கான உரிமையை உறுதிசெய்வதோடு எங்களின் பன்முகத்தன்மையை பாதுகாக்கிற ஒரு நல்லஆட்சியைக் கொடுங்கள் என்கிற எம்மக்களின் கோரிக்கை சீட்டேஅவர்களது வாக்குச்சீட்டு.
இதை நீங்கள் மிகச்சரியாகப் புரிந்து வைத்திருப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான உங்களது முதல்பத்திரிக்கையாளர் சந்திப்பு கூறுகிறது. அந்தச் சந்திப்பில் நீங்கள்கூறிய கீழ்க்காணும் இரண்டுவிஷயங்கள் மிக முக்கியமானவையாக எனக்குப்படுகின்றன.
1)   இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வினையாற்றியது விவசாயிகளின்பிரச்சினைகள்தான்2)   எப்படி நடந்துகொள்ளக் கூடாதுஎன்பதை நான் திருமோடியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.
இவை இரண்டும் மிகவும்வலிமையானவை ஆகும். நீங்கள்ஒத்துக் கொள்கிறீர்களோ இல்லையோ, நான் ஒத்துக் கொள்கிறேனோஇல்லையோ மோடிக்கான எதிர்நீங்கள்தான் என்பதை இந்தத்தேர்தல் முடிவுகள் புரிகிறபாஷையில் நமக்கு சொல்லியிருக்கின்றன.
இந்தத் தேர்தலை ஒட்டிதில்லியிலும் அயோத்தியிலும் மிகப்பெரியபேரணிகள் நடந்தன ராகுல். இருநூறுக்கும்அதிகமான விவசாய சங்கங்கள்ஒன்றிணைந்து தில்லியிலும் சங்பரிவார அமைப்புகள் ஒன்றிணைந்துஅயோத்தியிலும் அந்தப் பேரணிகளைநடத்தின. அவற்றின் தாக்கத்தையும் எதிர்த்தாக்கத்தையும் நாம் அவசியம் இந்தத்தேர்தல் குறித்த பரிசீலனைக்குள்கொண்டுவர வேண்டும்.
தில்லியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கானவிவசாய மக்களின் கண்களில்தங்கள் வாழ்க்கையைக் களவுகொடுத்தவலியும் அதை மீட்டெடுக்க வேண்டும்என்ற உறுதியும் இருந்தன. அயோத்தியில் கூடிய திரளின்கண்களில் மதவெறி மட்டுமேதிரண்டு வழிந்தது.
1)   அயோத்தியில் திரண்டவர்கள் பாபர்மசூதி இருந்த இடத்தில்ராமருக்கு ஆலயம் கட்டியேதீர வேண்டும் என்றுகத்தினார்கள்2)   தில்லியில் திரண்ட விவசாயிகள்தங்களுக்கு ‘ராமர் கோயிலெல்லாம் வேண்டாம். விவசாயக் கடன் தள்ளுபடிதான்வேண்டும்’ என்று முழக்கமிட்டார்கள்.
மக்கள் விவசாயிகளின் குரலைவாக்குச் சீட்டுகளின்மூலம் எதிரொலித்திருக்கிறார்கள். இந்தமுறை பாஜகவிற்கு எதிராகவாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர்ராம பக்தர்கள்தான். இன்னும்சொல்லப்போனால், அவர்களில் பலர்ராமர் கோவிலுக்கு ஆதரவானவர்களே. ஆக, அவர்களுக்கு ராமனைக் கும்பிடக்கோவிலுக்கு போக வேண்டும் என்றால்அதற்கு தாம் உயிரோடுஇருக்க வேண்டும் என்பதும்அதற்கு விவசாயிகள் பிழைத்திருக்கவேண்டும் என்பதும் புரிந்திருக்கிறது.
நமது நாட்டின் மொத்தமனித உழைப்பில் மூன்றில்ஒரு பங்கு விவசாயத்தொழிலாளிகளின் உழைப்பு என்றுஒரு அறிக்கை கூறுகிறது. அதுவே நமது கிரமங்களைப்பொறுத்தவரை 55 சதவிகித மனிதஉழைப்பு விவசாயத் தொழிலாளார்களுடையது என்றும் அதே அறிக்கைகூறுகிறது. இதில் ஐம்பது சதவிகிதஉழைப்பை தலித் விவசாயத்தொழிலாளர்களே வழங்குகிறார்கள்.
2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில்36,332 விவசாயத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 16,324 பேர் விவசாயத்தொழிலாளர்கள். நடக்கும் விவசாயத்தற்கொலைகளில் விவசாயக் கூலித்தொழிலாளிகளின் தற்கொலை விகிதாச்சாரம்அதிகரித்தபடியே வருகிறது போன்றதகவல்களை ‘தேசியக் குற்றப் பதிவுஆணையத்தின் புள்ளி விவரங்கள்’ கூறுவதாக முனைவர் தி.ராஜ்பிரவீன் தனது கட்டுரைஒன்றில் கூறுகிறார்.
பீகார், மேற்கு வங்கம், உத்திர்கண்ட்ஆகிய மாநிலங்களில் விவசாயத்தற்கொலைகள் என்பது விவசாயத்தொழிலாளிகளின் தற்கொலையாகவே உள்ளது. இதற்கான காரணம் விவசாயிகளால்விவசாயத்தை விட்டுவிட்டு வேறுதொழிலுக்கு  ஏதோஒரு புள்ளியில் நகர்ந்துவிடமுடியும். ஆண்டைகளால் முதலாளியாக முடியும். ஆனால் விவசாயத் தொழிலாளிகளால்வேறு தொழிலுக்கு அவ்வளவுஎளிதாக மாறிவிட முடியாது. அதனால்தான் வேறுவழியே இல்லாதபோதுஅவன் தற்கொலை செய்துகொள்கிறான்.
விவசாயிகளின் கீழ்க்காணும் பிரதானகோரிக்கைகளான,
1)   விளைவிக்க ஆகும் செலவின்ஒன்றரை மடங்கில் ஆதரவுவிலை வேண்டும்2)   ஏதுமற்று கையறு நிலையில்இருக்கக்கூடிய விவசாயிகளின் கடனைதள்ளுபடி செய்ய வேண்டும்.
ஆகிய இரண்டுமே நியாயமானவையும்நிறைவேற்றக் கூடியவையுமே ஆகும். நாடாளுமன்றத்தைக் கூட்டி மூன்றுவாரங்கள் தங்களது இந்தஇரண்டு கோரிக்கைகளைப் பற்றிமட்டுமே விவாதிக்க வேண்டும்என்பது அவர்களது வேண்டுகோள். அதைக்கூட ஏற்க மறுத்ததுபாஜக அரசு.
கேரளாவில், தமிழகத்தில், கர்நாடகாவில் பேரிடர்கள்ஏற்பட்ட பொழுது பாஜகவினர்மிகத் திமிரோடு நடந்துகொண்டார்கள். தமிழர்கள் என்னபாஜகவிற்கா ஓட்டுப் போட்டார்கள். எங்களுக்கு ஓட்டுப்போடாத உங்களுக்குநாங்கள் ஏன் நிவாரணம் வழங்கவேண்டும் என்றெல்லாம்கூட அந்தக்கட்சியின் தேசியச் செயலாளர்தமிழ் மண்ணில் நின்றுகொண்டுதமிழிலேயே பேசினார்.
தன் கையறு நிலைகண்டுதமிழக விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் அனுபவித்த வலியைஅந்த மாநிலத்து விவசாயியும்விவசாயத் தொழிலாளியும் உணரமுடிந்திருக்கிறது என்பதையே இந்ததேர்தல் முடிவு காட்டுகிறது.
உழைப்பவைன் வலியை உணர்வதற்குமொழியெல்லாம் தடை இல்லை ராகுல். 
அதனால்தான் மக்கள் அதற்குஇப்போது சரியாக பதில்கொடுத்திருக்கிறார்கள்.
தோழர் திருமாவளாவன் அவர்கள்கூறிய ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என் பிரியத்திற்குரிய ராகுல்
ஐந்து மாநிலங்களில் நடந்ததேர்தலை அம்பேத்கருக்கும் மனுவிற்கும்இடையே நடந்த ஒருபோராகவே அவர் கருதினார். ஆம், அம்பேத்கர்இயற்றிய இந்திய அரசமைப்புசட்டத்திற்கும் மனு எழுதிய மனுதர்மசாஸ்திரத்திற்கும் இடையே நடந்தபோர் என்று அவர்கூறியது முற்றிலும் சரி.
இந்திய அரசமைப்பு சட்டம்அனைவரும் சட்டத்தின் முன்சமம் என்கிறது. மனுசாஸ்திரம் அந்த சமத்துவத்தைமறுக்கிறது. குழந்தைத் திருமணத்தை அம்பேத்கர்இயற்றிய இந்திய அரசமைப்புசட்டம் குற்றம் என்கிறது. மனுவின் கொள்ளுப்பேரன் ஆதித்யநாத்தமது கட்சி ஆட்சிக்குவந்தால் ராஜஸ்தானில் அதற்குசட்டப் பாதுகாப்பு தரும்என்கிறார். 
இப்போதுகூட பாருங்கள் ராகுல்,
தீண்டாமை ஒழிப்பு சட்டத்தைஉச்சநீதி மன்றம் நீக்கியபிறகு  மத்தியஅரசு அதில் சிலசீர்திருத்தங்களை செய்து அமலுக்குகொண்டுவந்ததே தங்கள் தோல்விக்கானகாரணம் என்று அவர்கள்பரிசீலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அவர்கள் அங்கிருந்து நகரவேமாட்டார்கள்.
இப்போதுகூட அந்த எளியமக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம் மனுவாதிகளுக்குஎதிரான, பன்முகத் தன்மையை சிதைப்பவர்களுக்கு எதிரான போரில் நீங்கள்அவர்களுக்கான கருவி என்று கருதுவதால்தான். மற்றபடி, நீங்கள் மனுவிற்குஎதிரானவர் என்பதை, விவசாயிகளுக்கு ஆதரவானவர்என்பதை, பன்முகத்தன்மையை தாங்கிப்பிடிப்பவர் என்பதை எல்லாம்இனிதான் நிறுவ வேண்டும்.
எம் அப்பாவி மக்கள்மோடியை வீழ்த்த வேண்டும்என்றால் நீங்கள் வேண்டும்என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அப்படிமட்டும் அல்ல நான்உங்களவன் என்று நீங்கள்நிறுவிவிட்டால் போதும், என்பிரியத்திற்குரிய ராகுல் அவர்களேஇன்னும் முப்பது ஆண்டுகளுக்கானஅவர்களுக்கான ஒரு தலைவன் கிடைத்துவிட்டமகிழ்ச்சியில் அவர்கள் உங்களைக்கொண்டாடித் தீர்ப்பார்கள்.
”இதுதங்களுக்கான வெற்றிகரமான தோல்வி” என்று பாஜகவின் தமிழகத்துதலைவர் திருமதி தமிழிசைகூறினார். அதை கிண்டல் செய்துநிரவிவிட்டோம்தான். ஆனாலும் அவர்கூறியதில் உண்மை இல்லாமல்இல்லை ராகுல்.
திரிபுராவில் நாங்கள் தோற்றாலும்எங்களுக்கு கிடைத்த வாக்குகளின்அளவும் விகிதாச்சாரமும் மீண்டும்அங்கு வருவோம் என்றநம்பிக்கையை எங்களுக்குத் தந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே மாதிரியான வாக்குகளைஇப்போது பாஜகவும் ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும்பெற்றிருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுபார்க்கும்போது திருமதி தமிழிசைஅவர்களின் கூற்றை அவ்வளவுஎளிதாக நிராகரித்துவிட முடியாதுராகுல்.
கொஞ்சம் கசக்கும்தான், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும்அவ்வளவு பெரிதாக எந்தவித்தியாசமும் இல்லை என்பதைநீங்கள் உணரவேண்டும் என்பிரியத்திற்குரிய ராகுல்.
ரஃபேல் ஊழலுக்கு எதிராகநீங்கள் முழங்குவது ஒருநம்பிக்கையைத் தருகிறது. ஆனால்அவர்களுக்கு ரஃபேல் என்றால்காங்கிரசுக்கு போபர்ஸ் என்பதைநிராகரித்துக் கடந்துவிட முயற்சிக்காதீர்கள்.
மசூதியை இடித்தது அவர்கள்என்றால் அவர்கள் இடிக்கவேடிக்கை பார்த்தது அன்றைக்குபதவியில் இருந்த காங்கிரஸ்என்பதையும் போகிற போக்கில்நீங்கள் நிராகரித்துவிடக் கூடாது.
பெருமுதலாளிகளுக்கு அவர்கள் மட்டும்அல்ல காங்கிரசும் விசுவாசமாகத்தான் கடந்த காலத்தில் இருந்ததுஎன்பதையும் நீங்கள் நிராகரித்துவிடக் கூடாது.
அப்படிச் செய்வீர்கள் எனில்மீண்டும் ஒருமுறை நாங்கள்தோற்றுப் போவோம்.
பலம் வாய்ந்த பாஜகவைஎதிர்கொள்ள உங்களால் மட்டும்இயலாது என்பதை நீங்கள்உணர்ந்திருப்பதுகூட எமக்கான பலம்பிரியத்திற்குரிய ராகுல். அதேநேரம் அதை நடைமுறைப் படுத்துவதில், குறிப்பாக மாயாவதி மற்றும்அகிலேஷ் ஆகியோருடனான உங்கள்கட்சியின் நடைமுறை நிறையமாற வேண்டும்.
தேசம் முழுக்க பாஜகவிற்குஎதிரான ஒவ்வொரு மனிதனையும்ஓரணிப்படுத்த வேண்டும். அதற்குநீங்கள் இன்னும் உழைக்கவேண்டும்.
உங்களது வயதில் உங்களதுபக்குவமும் கீழிறங்கும் தன்மையும்நான் அறிந்ததுதான். ஆனால்மக்கள் தோற்றுப் போகக்கூடாதுஎன்றால் நீங்கள் இன்னும்கீழிறங்கி இன்னும் அதிகமாய் வேலை பார்க்கவேண்டும்.
எனக்குத் தெரியும் ராகுல்,
அதை நீங்கள் செய்வீர்கள்.
நன்றி.
அன்புடன்,இரா.எட்வின்






.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2019 04:20
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.