மின்சாரம் எங்களோடு காய் விட்டுவிட்டு மூன்றுதெரு தாண்டி நடைபயிற்சிக்கு சென்றுவிட்ட அந்த இருட்டுப் பொழுதில் அவரது அம்மாவோடும் அக்காவோடும் நம்மவீட்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தார் லேஷந்த் சார்.தெருவே இருண்டு கிடந்த அந்தப் பொழுதில் நம்மவீட்டு மொட்டைமாடி மட்டும் வெளிச்சமாயிற்று.மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டே இருந்தார்.அவர் பின்னால் அவரை விரட்டிக்கொண்டே ஓடியது வெளிச்சம்வெளிச்சத்தை வெளிச்சம் விரட்டியதுவெளிச்சமும் வெளிச்சத்தை விரட்டிய வெளிச்சமும் இசையை இறைத்துக்கொண்டே போயினஅந்தப் பொழுதில் நான் அங்கிருந்தது ஒரு கொடுப்பினைஒரு புள்ளியில் விட்டு அவரை இழுத்து தன் மடியில் கிடத்தியவாறே”எங்க, ஞாயிறு, திங்கள் சொல்லு”திமிறினார், திமிறினார் ஒருவாறாக மனம் இறங்கினார்,“ஞாயிறு, திங்கள், செவ்வாய். வியாழன், வெள்ளி, புதன், ம்ம்ம்ம்...,சனி”“டேய் செவ்வாய்க்கு அப்புறம் வியாழானாடா. செவ்வாய் , புதன்... எங்க சொல்லு”“ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, புதன், வியாழன், சனி””என்னடா இப்படி மாத்தி மாத்தி சொல்ற”“நான் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்”எனக்கென்னமோ லேஷந்த் சார் சொல்ற வரிசையில்தான் கிழமைகளை வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு?
Published on October 15, 2018 09:50